"ஆமாம்" என்றாள் பூரணி, மகிழ்ச்சியுடன்.
"உனக்கு யார் இந்தத் தகவலைச் சொன்னாங்க?"
"அவரோட பயணம் போயிருந்த அவர் நண்பர் திரும்பி வந்துட்டாரு. அவர் நேத்திக்கு எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு. அவர்தான் இந்தத் தகவலைச் சொன்னாரு."
"ஏன் அவரோடயே உன் காதலரும் வரலை?"
"அவருக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்காம். அதை முடிச்சுட்டு, அடுத்த கப்பல்ல வரேன்னு சொல்லி அனுப்பி இருக்காரு. அந்தக் கப்பல் இன்னும் ரெண்டு நாள்ள வந்துடும்."
"ஆனா, உன் காதலர் வரப் போறார்ங்கற மகிழ்ச்சி உங்கிட்ட முழுமையா இல்லையே!" என்றாள் தாரிணி.
"எதை வச்சு அப்படிச் சொல்ற?" என்றாள் பூரணி.
"ஏற்கெனவே, நீ ரொம்ப இளைச்சு, உன் தோள்கள் மெலிஞ்சிருக்கு. அதோட, உன் தோள்ள பசலை படர்ந்து, உன் தோள் நிறம் மாறி இருக்கே! அவர் பிரிவால வந்த இந்தப் பசலை, அவர் வரப் போறார்னு தெரிஞ்சதும் மறைஞ்சிருக்க வேண்டாமா?"
"நீ வேணும்னா பாரு. அவர் திரும்பி வந்து, அவரை நான் கண்ணால பார்த்த உடனேயே இந்தப் பசலை மறைஞ்சுடும்!" என்றாள் பூரணி, உற்சாகத்துடன்.
கற்பியல்
அவர்வயின் விதும்பல் (அவரை விரைவில் காணத் துடித்தல்)
No comments:
Post a Comment