"என்ன வெக்கமா?" என்றான்.
"பொண்ணுன்னா வெக்கம் இருக்காதா பின்னே?" என்றாள் அமரா.
அமராவைத் தன் இரு கைகளாலும் அணைத்துக் கொண்டான் சந்திரன் அதற்குப் பிறகு...
சட்டென்று கண் விழித்தாள் அமரா.
'நல்லவேளை கனவுதான்' என்ற ஆறுதலான எண்ணம் முதலில் தோன்றினாலும், 'கனவுதான் என்றாலும் இப்படியா?' என்ற கண்டனக் குரல் மனதில் எழுந்தது.
'ஒருவேளை இதையெல்லாம் நான் விரும்புகிறேனோ? அதனால்தான் கனவில் இப்படி வந்ததோ?
அமரா கட்டிலில் அமர்ந்திருந்தாள். அருகில் வந்த சந்திரன் தன் கையால் அவள் முகத்தை நிமிர்த்தினான்.
"என்ன வெக்கமா?" என்றான்.
"பொண்ணுன்னா வெக்கம் இருக்காதா பின்னே?" என்றாள் அமரா.
அமராவைத் தன் இரு கைகளாலும் அணைத்துக் கொண்டான் சந்திரன் அதற்குப் பிறகு...
"என்ன சந்திரன் இது? இப்படியெல்லாம்..." என்றாள் அமரா.
"ஏன்? இத்தனை நேரம் பேசாமதானே இருந்தே! உனக்குப் பிடிச்ச மாதிரிதானே நடந்துக்கிட்டேன்?" என்றான் சந்திரன்.
ஒரு கணம் கண்களை மூடிக் கொண்டாள் அமரா.
'அன்று கனவில் நடந்த நிகழ்வுகளைக் கனவுதானே என்று நினைத்து என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டேன். இன்று அதே நிகழ்வுகள் நிஜமாக நிகழ நான் எப்படி அனுமதித்தேன்? எனக்கு விருப்பமானபடி சந்திரன் நடந்து கொண்டான் என்பதால் நாணம் என்ற குணம் எனக்கு இயல்பாக இருப்பதையே நான் அறியாமல் இருந்து விட்டேனோ?' என்ற சிந்தனை அவள் மனதில் ஓடியது.
கற்பியல்
நிறையழிதல்
பொருள்:
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.
No comments:
Post a Comment