உனக்கு அவர் இருக்கும் இடமே தெரியாது, கடல் தாண்டிச் செல்வதாகச் சொன்னாரே தவிர, குறிப்பாக எந்த ஊருக்குப் போகப் போகிறார் என்று அவர் சொல்லவில்லை.
அவர் இங்கிருந்து கிளம்பியபோது, அவர் செல்லப் போகும் இடம் எது என்பது அவருக்கே தெரியாது. நீ எப்படி அவரைத் தேடிக் கண்டுபிடிக்கப் போகிறாயோ, தெரியவில்லை!
அப்படியே, அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தாலும், என்ன பயன்?
பிரிவு என்னும் பெரும் துயரத்தை அளித்து விட்டுப் போனவர், அந்தத் துயரைப் போக்கும் வகையில், திரும்பி வந்து அன்பு செலுத்தவில்லையே என்ற உன் ஏக்கம் நியாயமானதுதான்.
அதற்காக, அவரைப் பின் தொடர்ந்து போவதால் என்ன பயன்? உன் துன்பத்தை உணர்ந்து, உன் மீது அன்பு செலுத்தாதவர் தொலைவில் இருந்தால் என்ன, அருகில் இருந்தால் என்ன?
அதனால், அவர் இருக்கும் இடத்துக்குச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை. இதை உனக்கு நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லி விட்டேன். ஆயினும், பிடிவாதமாகக் கிளம்பி விட்டாய்.
சென்று வா, என் அருமை நெஞ்சே! உன்னைப் போன்ற பேதையிடம், நான் வேறு என்ன சொல்ல முடியும்!
கற்பியல்
நெஞ்சொடு கிளத்தல்
பொருள்:
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி, அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி, பிரிந்தவரின் பின் செல்கின்றாய், பேதை.
No comments:
Post a Comment