நாயகி தன் கணவனோடு ஒரு சோலையில் அமர்ந்திருக்கிறாள். அவள் கணவன் எழுந்து எங்கேயோ போய் விடுகிறான்.
நாயகி தனியே உட்கார்ந்திருக்கும்போது, ஒரு பெண் தன் கையில் ஒரு வாளை ஓங்கியபடி, அவளை நோக்கி வருகிறாள். நாயகி பயந்து போய் எழுந்து ஓடுகிறாள்.
ஓடிக் கொண்டிருக்கும்போதே, கனவு கலைந்து கண் விழுத்தாள் நாயகி.
என்ன ஒரு பயங்கரமான கனவு!
விடியற்காலையில் கண்ட கனவு பலிக்கும் என்பார்களே!
அப்படியானால், அவளை யாராவது கொல்லப் போகிறார்களா? எதற்காக?
கணவனைப் பிரிந்திருக்கும் காலத்தில், இப்படி ஒரு கனவு ஏன் வருகிறது? யாரிடமாவது இந்தக் கனவுக்கு விளக்கம் கேட்கலாமா? யாரிடம் கேட்பது?
மாலை வந்ததும், வாசலுக்கு வந்து திண்ணையில் அமர்ந்தாள் நாயகி.
கடந்த சில மாதங்களாகவே, மாலை நேரத்தில் அவளுக்கு ஏற்பட்டு வந்த உணர்வு அன்றும் ஏற்பட்டது.
மனதில் இனம் புரியாத ஒரு வலியும் வேதனையும்.
என் கணவரைப் பிரிந்ததிலிருந்து, இந்த மாலை நேரம் ஏன் என்னை இப்படித் துன்புறுத்துகிறது?
ஏ மாலையே! ஒருவேளை நீ என்னைப் போல் ஒரு பெண்ணாக இருந்தால், என் நிலையைப் புரிந்து கொண்டு, என்னைத் துன்புறுத்தாமல் இருப்பாயோ, என்னவோ!
இந்த எண்ணம் தோன்றியதுமே, அன்று விடியற்காலை கனவில் வந்த பெண்ணின் உருவம் மனதில் வந்து போயிற்று.
'ஓ! மாலைப் பொழுது என்னை வருத்துவதை நினைத்துக் கொண்டே தூங்கியதால்தான், மாலைப் பொழுது ஒரு பெண் வடிவத்தில் வந்து என்னைக் கொல்ல வருவது போன்ற கனவு வந்திருக்கிறது!'
அந்தச் சோர்வான மனநிலையிலும், கனவு அளித்த பயம் நீங்கியது நாயகிக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது.
கற்பியல்
பொழுது கண்டிரங்கல்
பொருள்:
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது, கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.
No comments:
Post a Comment