"அவ காதலிச்சுக் கைப்பிடிச்சது அவ அத்தை பையனைத்தானே? அதில என்ன ஆச்சரியம் இருக்கு?"
"இருக்கே! மலரோட காதலை அவ அத்தை பையன் அவ்வளவு சுலபமா ஏத்துக்கலையே! ஆனா, இவ பிடிவாதமா இருந்து அவரைத் தன் காதலை ஏத்துக்க வச்சு, அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டா!"
திருமண நிகழ்வில், தனிமையில் சிறிது நேரம் தோழிகளுடன் இருந்தபோது, தோழிகள் இவ்வாறு பேசியதைக் கேட்க மலர்விழிக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மலர்விழிக்குத் திருமணமாகிச் சில மாதங்கள் கழித்து, அவள் நெருஙுகிய தோழி பல்லவி அவளைப் பார்க்க வந்தாள்.
"உன் கல்யாணத்துக்கு வர முடியல. சாரி!" என்றாள் பல்லவி.
"நீதான் கல்யாணம் ஆகி அமெரிக்கா போயிட்டியே, உன்னால எப்படி வர முடியும்" என்றாள் மலர்விழி.
"ஏண்டி, மும்பையில இருந்துக்கிட்டு சென்னையில நடந்த உன்னோட திருமணத்துக்கு என்னால வர முடியலைங்கறதை சொல்லிக் காட்டறியா?" என்ற பல்லவி, "ஆமாம், ஏன் கிண்டலாப் பேசறப்ப கூட உன் முகம் இவ்வளவு சீரியஸா இருக்கு. உடம்பு சரியில்லையா?" என்றாள்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லையே!" என்று மலர்விழி சொல்லிக் கொண்டிருந்தபோதே, அவளிடமிருந்து ஒரு விம்மல் வெடித்தது. அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், தோழியின் தோளில் சாய்ந்து தேம்பி அழ ஆரம்பித்தாள் மலர்விழி.
"என்னடி ஆச்சு? ஏன் அழறே?" என்றாள் பல்லவி, திகைப்புடன்.
சில விநாடிகள் கழித்து, அழுது ஓய்ந்தபின், மெல்லத் தலையை நிமிர்த்தினாள் மலர்விழி. கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டு, இயல்பு நிலைக்கு வர முயன்றாள்.
பல்லவி தோழியின் தோளை ஆதரவுடன் அணைத்தபடி மௌனமாக இருந்தாள்.
"உனக்குத் தெரியுமே, என் அத்தை பையன் முரளியைத்தான் நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு..." என்று ஆரம்பித்தாள் மலர்விழி.
"ஏன், உனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிக்கறதில விருப்பம் இல்லையா? உங்க அப்பா அம்மாவோட வற்புறுத்தலினாலதான் ஒத்துக்கிட்டியா?"
"வற்புறுத்தினது நான்தாண்டி! சின்ன வயசிலேந்தே முரளி மேல எனக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. ஆனா, அவருக்கு என் மேல அந்த மாதிரி விருப்பம் எதுவும் இருந்ததில்ல போலருக்கு. என் விருப்பத்தை நான் என் அப்பாகிட்ட சொன்னப்ப, என் அப்பா முரளியைக் கேட்டாரு. முதல்ல முரளி தனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாரு. ஆனா, நான் அவரைத்தான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு பிடிவாதமா இருந்ததால, என் அப்பா என் அத்தைகிட்ட, அதான் முரளியோட அம்மாகிட்ட, பேசி இருக்காரு. தன்னோட அம்மாவும் வற்புறுத்ததினதால, முரளி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரு போல இருக்கு. இப்ப கல்யாணத்துக்கப்புறம், ஏதோ கடமைக்காக என்னோட கணவனா இருக்கற மாதிரி நடந்துக்கறாரு. அவருக்கு என்கிட்ட அன்பு இருக்கற மாதிரி தெரியல. திருமண வாழ்க்கையில, எனக்குக் கொஞ்சம் கூட மகிழ்ச்சியே இல்ல."
சொல்லி முடித்ததும், மலர்விழியின் கண்களில் மீண்டும் நீர் வழிய ஆரம்பித்தது.
"கவலைப்படாதேடி! கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாயிடும்!" என்றாள் பல்லவி, ஆறுதலாக.
"எனக்கு அப்படித் தோணல!" என்றாள் மலர்விழி
கற்பியல்
தனிப்படர் மிகுதி (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)
பொருள்:
நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால், நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?
No comments:
Post a Comment