"பொழுது விடிஞ்சுடுச்சா என்ன? " என்றாள் மணிமேகலை, கண்களைக் கசக்கிக் கொண்டு.
"இல்லை. விடியறதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு!" என்றான் அவள் கணவன் கதிரவன்
"பின்னே ஏன் அதுக்குள்ள எழுப்பினீங்க?" என்றாள் மணிமேகலை, சிணுங்கியபடி.
"முழிப்பு வந்ததும் உன்னைப் பார்த்தேன். உன் உடம்பு நடுங்கின மாதிரி இருந்துச்சு. அதான் எழுப்பினேன். உடம்புக்கு ஒண்ணுமில்லையே!"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. நல்லாத்தான் இருக்கேன்! படுத்துக்கங்க. அதான் பொழுது விடியலையே!" என்றாள் மணிமேகலை.
'தூக்கத்தில் கணவனின் அணைப்பிலிருந்து சற்று விலகியதுமே, உடலில் வேகமாகப் பசலை படர்ந்திருக்கிறது. அது உடல் நடுங்குவது போல் கணவனுக்குத் தெரிந்திருக்கிறது. இந்தப் பசலை படுத்தும் பாடு இருக்கிறதே!' என்று மனதுக்குள் சலித்துக் கொண்டாள் மணிமேகலை.
கற்பியல்
பொருள்:
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை அள்ளிக் கொள்வது போல் வந்து பரவி விட்டதே!
No comments:
Post a Comment