Wednesday, May 10, 2023

1187. தூக்கதிலிருந்து எழுப்பியது ஏன்?

தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பப்பட்ட மணிமேகலை கண் விழித்தாள்.

"பொழுது விடிஞ்சுடுச்சா என்ன? " என்றாள் மணிமேகலே கண்களைக் கசக்கிக் கொண்டு.

"இல்லை. விடியறதுக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு!" என்றான் அவள் கணவன் கதிரவன்

"பின்னே ஏன் அதுக்குள்ள எழுப்பினீங்க?" என்றாள் மணிமேகலை சிணுங்கியபடி.

"முழிப்பு வந்ததும் உன்னைப் பார்த்தேன். உன் உடம்பு நடுங்கின மாதிரி இருந்துச்சு. அதான் எழுப்பினேன். உடம்புக்கு ஒண்ணுமில்லையே!"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. நல்லாத்தான் இருக்கேன்! படுத்துக்கங்க. அதான் பொழுது விடியலையே!" என்றாள் மணிமேகலை.

'தூக்கத்தில் கணவனின் அணைப்பிலிருந்து சற்று விலகியதுமே உடலில் வேகமாகப் பசலை படர்ந்திருக்கிறது. அது உடல் நடுங்குவது போல் கணவனுக்குத் தெரிந்திருக்கிறது. இந்தப் பசலை படுத்தும் பாடு இருக்கிறதே!' என்று மனதுக்குள் சலித்துக் கொண்டாள் மணிமேகலை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

பொருள்:
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...