பைங்கிளி கோபத்துடன் கிணற்றடிக்குச் சென்றாள்.
கிணற்றிலிருந்து நீர் இழுக்கப்படும் சத்தம் கேட்டு அங்கே வந்த பைங்கிளியின் தாய் "என்னடி இது அதிசயமா இருக்கு? குளி குளின்னு நான் சொன்னாக்கூட சோம்பல் பட்டுக்கிட்டுக் குளிக்காம இருப்ப. இன்னிக்குக் காலையில எழுந்தவுடனேயே குளிக்கப் போயிட்டே!" என்றாள்.
பைங்கிளி தன் தாய்க்கு பதில் சொல்லவில்லை.
வாளியிலிருந்த தண்ணீரை உடலில் ஊற்றிக் கொண்டவள், மஞ்சளைத் தரையில் தேய்த்து மஞ்சள் குழைவை எடுத்து சாம்பல் படர்ந்தது போல் வெளிறி இருந்த கைகள் மீது அழுத்தித் தேய்த்தாள்.
தேய்க்கும்போதே, தன் மேனியில் படர்ந்திருந்த பசலையைப் பார்த்துப் பேசுவது போல் "ஏண்டி பசலை! என் கணவனோட பிரிவைத் தாங்க முடியாம நான் சாப்பாடு பிடிக்காம, தூக்கம் வராம தவிச்சுக்கிட்டிருக்கேன. நீ என்னடான்னா அவரோட பிரிவுதானே உன்னை உண்டாக்கிச்சுங்கற பெருமையோட என் உடம்பு மேல ஏறிப் பரவிக்கிட்டிருக்க! இந்த மஞ்சளைத் தேய்ச்சு உன்னைஅழிச்சுடறேன் பாரு!" என்றாள் பைங்களி.
"ஏண்டி, நான் கேக்கறதுக்கு பதில் சொல்லாம உன் காலைப் பாத்து ஏதோ பேசிக்கிட்டிருக்க! உன் கணவன் ஊருக்குப் போனாலும் போனான், நாளுக்கு நாள் உன் கிறுக்கு அதிகமாகிக்கிட்டே இருக்கு!" என்றபடியே உள்ளே திரும்பினாள் பைங்களியின் தாய்.
கற்பியல்
பொருள்:
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது
No comments:
Post a Comment