"என்ன முன்னேற்றம்? உடல் பருத்திருக்கா?" என்றாள் கயல்விழி.
"உடம்பு பருக்கல. அது எப்பவுமே பருக்காது! ஆனா, போன தடவை நான் உன்னைப் பார்த்தப்ப, அழுது அழுது உன் கண் எல்லாம் வீங்கி இருந்தது. எத்தனை நாளைக்குடி அழுதுக்கிட்டே இருப்பேன்னு நான் கூடக் கேட்டேன். ஆனா இந்த முறை, உன் கண் ஈரமில்லாம கொஞ்சம் தெளிவா இருக்கு. மனசை சமாதானப்படுத்திக்கிட்டு, அழறதை நிறுத்திட்டேன்னு நினைக்கிறேன். இது எனக்கு ஆறுதலா இருக்கு!"
கயல்விழி மௌனமாக இருந்தாள்.
"கயல்! உன் நிலைமை எனக்குப் புரியுது. காதலிச்சவன் பிரிஞ்சு போயிட்டான்னா, அது பெரிய துயரம்தான். ஆனா, அதுக்காக எவ்வளவு நாள் அழுதுக்கிட்டிருந்த நீ! எனக்கு அது பொறுக்கல. அதான் ஒவ்வொரு தடவையும், 'அழறதை நிறுத்திட்டு அடுத்த வேலையைப் பாருடி!'ன்னு உங்கிட்ட சொல்லுவேன். உனக்கு என் மேல கோபம் கூட ஏற்பட்டிருக்கலாம். ரொம்ப நாள் கழிச்சு, இப்பதான் கண்ணீர் இல்லாத உன் கண்ணைப் பாக்கறேன். எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு!" என்றுபடியே, அன்புடன் தோழியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் பவளக்கொடி.
'அடி முட்டாள் பெண்ணே! நான் என் வருத்தத்தைப் போக்கிக்கிட்டு அழறதை நிறுத்திட்டதாவா நினைக்கற? உண்மை அது இல்ல. அழுது அழுது என் கண்ணில இருந்த தண்ணி அத்தனையும் வத்திப் போச்சு! ஆனா, என் கண்களுக்கு இந்த தண்டனை வேண்டியதுதான். அவைதானே எனக்குக் காதல் நோயை ஏற்படுத்தின?' என்று நினைத்துக் கொண்டாள் கயல்விழி.
கற்பியல்
பொருள்:
தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.
No comments:
Post a Comment