Saturday, October 15, 2022

1153. அரசரின் ஆலோசகர்

"உன் வீட்டுக்காரர் அரசருக்கே ஆலோசனை சொல்றவராமே!" என்றாள் சாந்தினி.

"ஆமாம். மற்ற நாடுகள் எதிர்காலத்தில என்னென்ன செய்வாங்கங்கறதையெல்லாம் கணிச்சு சொல்லுவாரு. அதனால அரசர் அவரைத் தன் ஆலோசகராக வச்சுக்கிட்டிருக்காரு!" என்றாள் வாதினி பெருமையாக.

"எப்படி அது? அவரு என்ன சோதிடரா, இல்லை முக்காலும் உணர்ந்த முனிவரா?"

"ரெண்டும் இல்லை. எந்த அரசர் எப்படிப்பட்டவர்ங்கறதை முதல்ல கவனிச்சுப் புரிஞ்சுக்கிட்டு, நடக்கற விஷயங்களை உற்று கவனிச்சு, ஒற்றர்கள் கொண்டு வர செய்திகளை எல்லாம் சேர்த்துப் பாத்து எந்த அரசர் எந்த நேரத்தில எப்படி நடந்துப்பாருன்னு யோசிச்சுப் பாத்து சொல்றதுதான் அவரோட திறமை!"

"இப்படிப்பட்டவர் கணவராக் கிடைச்சதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணுண்டி!" என்றாள் சாந்தினி.

"ஏண்டி உற்சாகம் இல்லாம இருக்க?" என்றாள் சாந்தினி.

"என் கணவர் திடீர்னு எங்கேயாவது பயணம் போயிடுவாரோ, நான் அவரை விட்டுப் பிரிஞ்சிருக்க வேண்டி இருக்குமோன்னு எனக்குக் கவலையா இருக்கு!" என்றாள் வாதினி.

"அவர் உன்னை விட்டு எப்பவுமே பிரிய மாட்டேன்னு உனக்கு உறுதி அளிச்சிருக்கார்னு சொன்னியே!"

"உறுதி அளிச்சிருக்கார்தான்! ஆனா அரசாங்கத்தில முக்கியமான பொறுப்பில இருக்கறவரு எப்பவாவது பயணம் போகாமயா இருப்பாரு?"

"அப்படின்னா அவர் உனக்குப் பொய் வாக்குறுதி கொடடுத்திருக்கார்னு சொல்றியா?"

"சேச்சே! அப்படிச் சொல்லல. தான் எப்பவும் அரண்மனையிலதான் இருப்போம், வெளியூருக்கு எங்கேயும் போக வேண்டி இருக்காதுன்னு அவர் நினைச்சிருக்கலாம். ஆனா அவரோட வேலை செய்யற பல பேர் வேலை விஷயமா பயணம் போகறதைப் பாக்கறப்ப, இவரும் சில சமயம் என்னை விட்டுட்டுப் பயணம் போக வேண்டி இருக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு!" என்றாள் வாதினி.

"மற்ற அரசர்கள் நாளைக்கு என்ன செய்யப் போறாங்கன்னு கணிச்சுச் சொல்ற உன் கணவர் உன்னைப் பிரியமாட்டேனு சொன்னா, அந்தக் கணிப்பு மட்டும் சரியா இருக்காதோன்னு நினைக்கறியே!" என்றாள் சாந்தினி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1153
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

பொருள்:
எல்லாம் அறியும் ஆற்றல் உ டைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், பிரியேன் என்று அவர் சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...