பிறகு உள்ளே திரும்பி, "லட்சுமி! மணிமேகல வந்தந்திருக்கா பாரு!" என்றாள் தன் மகளுக்குக் கேட்கும்படி.
"உள்ளிருந்து வந்த லட்சுமி, மணிமேகலையைப் பார்த்து, "வா, போகலாம்!" என்றாள்.
"ஏண்டி இப்படியேவா போவ? முகத்தில எண்ணெய் வழியுது. கையில முகத்தில் எல்லாம் அங்கங்கே தோல் நிறம் மாறி இருக்கு. முகத்தைக் கழுவிக்கிட்டு நல்ல புடவை கட்டிக்கிட்டு, தோல் நிறம் மாறி இருக்கிற இடங்கள்ள ஏதாவது களிம்பைத் தடவிக் கொஞ்சாமாவது நிற மாற்றங்களைச் சரி செஞ்சுக்கிட்டுப் போவியா?" என்றாள் அழகம்மை.
அழகம்மை பேசி முடிப்பதற்குள், லட்சுமி தெருவில் இறங்கி விட்டாள். வேறு வழியில்லாமல் மணிமேகலையும் அழகம்மையைப் பார்த்து விடைபெறுவது போல் தலையாட்டி விட்டு லட்சுமியைப் பின்தொடர்ந்தாள்.
தெருவில் சிறிது தூரம் நடந்ததும், "ஏண்டி உங்கம்மா சொல்றது சரிதானே! நீ எவ்வளவு அழகா இருப்பே! இப்ப உன் முகத்தைப் பார்க்கவே சகிக்கல. பசலை படர்ந்து தோல் வேற அங்கங்க நிறம் மாறி இருக்கு. தெருவில உன்னைப் பாக்கறவங்க கூட ஒரு மாதிரியாதான் பார்ப்பாங்க. உன் அம்மா சொன்னபடி கொஞ்சம் ஒப்பனை செஞ்சுக்கிட்டு வந்திருக்ககலாம் இல்ல?" என்றாள் மணிமேகலை.
"என்னவோ தெரியல. அவரு என்னை விட்டுப் பிரிஞ்சு வெளியூர் போனப்பறம் நான் மாறிட்ட மாதிரி இருக்கு. போறப்ப அவர் என்னோட அழகையும், வெட்கத்தையும் எடுத்துக்கிட்டு, பதிலுக்கு இந்தக் காதல் நோயையும், பசலை நோயையும் கொடுத்துட்டுப் போயிட்டாரோ என்னவோ!" என்றாள் லட்சுமி.
கற்பியல்
பொருள்:
காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.
No comments:
Post a Comment