tag:blogger.com,1999:blog-7819563263665287742024-03-24T05:13:34.306-07:00திருக்குறள் கதைகள் - காமத்துப்பால்Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.comBlogger224125tag:blogger.com,1999:blog-781956326366528774.post-11544437931053581972024-03-23T22:30:00.000-07:002024-03-24T05:10:35.462-07:001304. பூங்கொத்துடன் வந்தவன்!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij02-igIjcYZGpCI19cNr_dnNHZptkL2ZigP_d6bulBp9n8YRkm4hv7qAVzgZo2oc-fJ0fgfVoM-UVHSmvAPy7C0exivla8loRjYLnYYxpdBq05EKfpu7mL2ZcMqEI-WwoFqgnFN3yE6tYq40xfrSa5eiQVL5q7n_dAMVeQdCbz8WON2tl1gzI67BtglM/s275/1305.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" height="183" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij02-igIjcYZGpCI19cNr_dnNHZptkL2ZigP_d6bulBp9n8YRkm4hv7qAVzgZo2oc-fJ0fgfVoM-UVHSmvAPy7C0exivla8loRjYLnYYxpdBq05EKfpu7mL2ZcMqEI-WwoFqgnFN3yE6tYq40xfrSa5eiQVL5q7n_dAMVeQdCbz8WON2tl1gzI67BtglM/s1600/1305.jpg" width="275" /></a></div>"என்னடி, முரளி ரெண்டு நாளா உன்னைப் பாக்கவே வரல? " என்றாள் கற்பகம், தன் மகள் கவிதாவிடம்.<p></p><p>"வேற ஏதாவது வேலை இருந்திருக்கும்" என்றாள் கவிதா.</p><p>"என்ன வேலை இருந்தாலும் தினம் ஒரு தடவை உன்னைப் பார்க்க வராம இருக்க மாட்டாரே!"</p><p>தாய் கூறியதைக் கேட்டதும் கவிதாவுக்குத் தொண்டையை அடைப்பது போல் இருந்தது.</p><p>'ஏதோ, சண்டை வந்துடுச்சு. நானும் கோபத்தில இனிமே என்னைப் பார்க்க வராதீங்கன்னு சொல்லிட்டேன். அதுக்காக இப்படியா வீறாப்பா என்னை வந்து பாக்காம இருப்பாரு? ஒருவேளை வராமலே இருந்துடுவாரோ? சேச்சே! அது எப்படி? கல்யாணம்தான் நிச்சயம் ஆயிடுச்சே!'</p><p>"உங்களுக்குள்ள சண்டை எதுவும் இல்லையே! கல்யாணம் நிச்சயம் ஆனப்புறம் சண்டைஎதுவும் போட்டுக்காதீங்க!" என்றாள் கற்பகம் சிரித்தபடி.</p><p>'அம்மா விளையாட்டாகப் பேசுகிறாள். ஆனால் உண்மையாகவே நாங்கள் சண்டை போட்டுக் கொண்டு நான் அவரை இங்கே வர வேண்டாம் என்று சொல்லி, அதனால் இரண்டு நாட்களாக அவர் என்னைப் பார்க்க வராமல் இருக்கிறார் என்று தெரிந்தால் என்ன சொல்வாளோ!'</p><p><span style="font-size: large;">அ</span>ன்று மாலை, "நானும் உன் அப்பாவும் கமலா அத்தை வீட்டுக்குப் போயிட்டு வரோம். எட்டு மணிக்கு வந்துடுவோம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் கற்பகம்.</p><p>கற்பகம் கிளம்பி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அழைப்பு மணி அடித்தது.</p><p>'அம்மாவாத்தான் இருக்கும். எப்பவுமே வெளியில கிளம்பறப்ப எதையாவது மறந்துட்டுப் போறது, கொஞ்ச தூரம் போனப்பறம் நினைவு ந்து திரும்ப வந்து எடுத்துக்கிட்டுப் போறது! இதுவே அம்மாவுக்கு வழக்கமாப் போயிடுச்சு!' என்று நினைத்தபடியே கதவைத் திறந்த கவிதாவுக்கு இன்ப அதிர்ச்சி. </p><p>வாசலில் முரளி நின்று கொண்டிருந்தான். கையில் ஒரு பூங்கொத்து வேறு!</p><p>கவிதா பேசாமல் உள்ளே வந்து சோஃபாவில் அமர்ந்தாள். அவளைத் தொடர்ந்து வந்த முரளி அவள் அருகில் சோஃபாவில் அமர்ந்து கொண்டு அவளிடம் பூங்கொத்தைக் கொடுத்தான்.</p><p>"பூங்கொத்தெல்லாம் எதுக்கு? எனக்கு இன்னிக்குப் பிறந்த நாள் இல்லையே!" என்றாள் கவிதா, பூங்கொத்தை வாங்காமலே.</p><p>"நாம சண்டை போட்டுக்கிட்டதே உனக்கு வருத்தமா இருந்திருக்கும். என்னதான் கோபத்தில உன்னைப் பார்க்க வர வேண்டாம்னு நீ சொன்னாலும், ரெண்டு நாளா நான் உன்னைப் பார்க்க வராதது உன் வருத்தத்தை இன்னும் அதிகமாத்தான் ஆக்கி இருக்கும். நீ சொன்னதுக்காக நானும் ரெண்டு நாள் வராம இருந்தேன். இனிமேயும் உன் வருத்தத்தை நீடிக்க விடக் கூடாதுன்னுதான் இப்ப உன்னைப் பார்க்க வந்தேன்" என்றான் முரளி.</p><p>'இப்படிப்பட்ட நல்ல உள்ளவன் கொண்டவனை ஏதோ கோபத்தில் என்னைப் பார்க்க வராதீர்கள் என்று சொல்லி விட்டோமே' என்று நினைத்த கவிதா, "சாரி!" என்றபடியே அவன் கொடுத்த பூங்கொத்தை மனநெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள்.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>கவிகாமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 131</b></div><div style="text-align: center;"><b>புலவி (பொய்க் கோபம்)</b></div></div></div><div><b>குறள் 1304<br /></b><div><div><div><div>ஊடி யவரை உணராமை வாடிய</div><div>வள்ளி முதலரிந் தற்று.</div></div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.</div></div></div><div style="text-align: center;"><b>குறள் 1305 (விரைவில்)<br /><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/03/1303.html" target="_blank">குறள் 1303</a></b></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-65805603968815972402024-03-17T09:33:00.000-07:002024-03-24T05:09:28.074-07:001303. நளினியின் அச்சம்<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8m5YnChzUDk8qNQ00Y5SCartEhhyboG6uUQfJly0s_371EpT-_wZ19Wa4P3RfYqwp6p3uAulhhEFCBEu9cZl5gzAZWA5UHQrdGq_o4jRRJwgkncf7ekQtK6Sgz0yogLBsvxmKxVaaBcJF6L0sbZyqZdRdCJ8czc7w9ZnTmBIyPdfZFDYF_oF2cDNBt70/s254/download.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="198" data-original-width="254" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8m5YnChzUDk8qNQ00Y5SCartEhhyboG6uUQfJly0s_371EpT-_wZ19Wa4P3RfYqwp6p3uAulhhEFCBEu9cZl5gzAZWA5UHQrdGq_o4jRRJwgkncf7ekQtK6Sgz0yogLBsvxmKxVaaBcJF6L0sbZyqZdRdCJ8czc7w9ZnTmBIyPdfZFDYF_oF2cDNBt70/s1600/download.jpg" width="254" /></a></div>"என்னடி ரெண்டு மூணு நாளா ரொம்ப சோர்வா இருக்க? என்ன விஷயம்?" என்றாள் ருக்மிணி.<p></p><p>"ஒண்ணுமில்லையே!" என்றாள் நளினி.</p><p>"ஒண்ணுமில்லேன்னு உன் வாய்தான் சொல்லுது. உன் முகம் ஏதோ இருக்குன்னு இல்ல சொல்லுது?" என்ற ருக்மிணி, "கண்டுபிடிச்சுட்டேன். தினமும் காலேஜ் விடற நேரத்தில காலேஜுக்கு வெளியில பைக்கை வச்சுக்கிட்டுக் காத்துக்கிட்டிருந்து நீ வெளியில வந்ததும் உன்னை பைக்ல வச்சு அழைச்சுக்கிட்டுப் போவாரே உன் ஆளு, அவரு ரெண்டு நாளா வரலை போலருக்கு? என்ன ஆச்சு? எங்கேயாவது ஊருக்குப் போயிருக்காரா?" என்றாள்</p><p>இதைக் கேட்டதும் நளினியின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.</p><p>"என்னடி ஆச்சு?" என்றாள் ருக்மிணி பதட்டத்துடன்.</p><p>"சின்ன விஷயம். ஒரு விவாத்தில ஆரம்பிச்சு பெரிசாப் போயிடுச்சு. இனிமே உன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னுட்டுப் போயிட்டாரு. சொன்னபடியே ரெண்டு நாளா வரலை. நிரந்தரமா என்னை ஒதுக்கிட்டாரோன்னு பயமா இருக்கு" என்று நளினி கண்ணீருக்கிடையில் கூறிக் கொண்டிருந்தபோதே, "உன் ஆளுக்கு நூறு வயசுடி. நீ அவரைப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்கறப்பவே அவர் வந்துட்டாரு பாரு!" என்றாள் ருக்மிணி சிரித்தபடி. </p><p>நளினி திரும்பிப் பார்த்தாள். கல்லூரியின் வெளிக்கதவுக்கு அருகே மணிகண்டன் பைக்குடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.</p><p>"பைடி! நாளுக்குப் பார்க்கலாம்!" என்றபடியே வெளியே விரைந்தாள் நளினி.</p><p> எதுவும் பேசாமல் மணிகண்டனின் பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டாள் நளினி.</p><p>பைக் சற்று தூரம் சென்றதும், "ஏன் ரெண்டு நாளா வரலை? அன்னிக்கு என் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போனதால ரொம்ப பயந்துட்டேன்!" என்றாள் நளின்.</p><p>"ஏற்கெனவே நான் கோவிச்சுக்கிட்டு ரெண்டு நாள் வராம இருந்தது உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்தி இருக்கும். உன்னை மேற்கொண்டு வருத்தப்பட வைக்கக் கூடாதுன்னு இன்னிக்கு ஓடி வந்துட்டேன். இன்னிக்கு நாம ஒரு சினிமாவுக்குப் போகப் போறோம்" என்றான் மணிகண்டன்.</p><p>"என்ன சினிமா?"</p><p>"சினிமா எதுவா இருந்தா என்ன? பாக்ஸ்ல டிக்கட் வாங்கி இருக்கேன். அங்கே ரெண்டரை மணி நேரம் நாம மட்டும் தனியா இருக்கப் போறோம்!" என்று மணிகண்டன் கூறியபோது அவன் முகத்தில் எத்தகைய குறும்பு உணர்ச்சி இருந்திருக்கும் என்பதை நளினியால் பைக்கின் பின்னால் அமர்ந்தபடியே காண முடிந்தது.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 131</b></div><div style="text-align: center;"><b>புலவி (பொய்க் கோபம்)</b></div></div></div><div><b>குறள் 1303<br /></b><div><div><div>அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்</div><div>புலந்தாரைப் புல்லா விடல்.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/03/1304.html" target="_blank">குறள் 1304</a><br /><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/03/1302.html" target="_blank">குறள் 1302</a></b></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-48770307556704187012024-03-17T01:00:00.000-07:002024-03-24T05:08:59.428-07:001302. தோழியின் மூலம் வந்த செய்தி!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqNFAyFXOsCtlp9yyjSZH0gJZg3baIsbmXg4rVjzzXL5IXBkCb9SRZp_YmRTGl3fcZfcD-O6lxWejgn1jegCY5Bppe9FjWIZF9sZlp5QRI5oY2wJs7JUQrQ0RSRQk-MRtlmxEL8qY3C8OnuRjalqdk1pkI9RS1e47Zbm6T4N4FYx6HKwiOe7sCpcYG94g/s275/images.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" height="183" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqNFAyFXOsCtlp9yyjSZH0gJZg3baIsbmXg4rVjzzXL5IXBkCb9SRZp_YmRTGl3fcZfcD-O6lxWejgn1jegCY5Bppe9FjWIZF9sZlp5QRI5oY2wJs7JUQrQ0RSRQk-MRtlmxEL8qY3C8OnuRjalqdk1pkI9RS1e47Zbm6T4N4FYx6HKwiOe7sCpcYG94g/s1600/images.jpg" width="275" /></a></div>"ரவி உன்னை இன்னிக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு பார்க்குக்கு வரச் சொன்னான்" என்றாள் லதா.<p></p><p>"அப்படியா?" என்றாள் பார்க்கவி மகிழ்ச்சியுடன். "நல்லவேளை! எங்கே அவன் பேசாமலே இருந்துடுவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். என் வயத்தில பாலை வார்த்த!" </p><p>"ஆனா ஒண்ணு. ஆண்களுக்கு ஈகோ அதிகம். அவங்க இறங்கி வந்ததாக் காட்டிக்க மாட்டாங்க. அதனால அவன் கூப்பிட்டு நீ போன மாதிரி இருக்க் கூடாது. நீ தற்செயலா பார்க்குக்குப் போன மாதிரியும், எதிர்பார்க்காம அவனைச் சந்திச்ச மாதிரியும் இயல்பாப் பேசணும். அவன் உன்னை வரச் சொல்லி எங்கிட்ட சொல்லி அனுப்பினதாலதான் நீ வந்தேன்னு காட்டிக்கக் கூடாது!" என்றாள் லதா.</p><p>"ஓகே! சாரோட ஈகோவைத் திருப்திப்படுத்தற மாதிரியே நடந்துக்கறேன்!" என்றாள் பார்க்கவி உற்சாகத்துடன்.</p><p>'முட்டாள் பெண்ணே! காதலனோட சண்டை போட்டுட்டு நாலஞ்சு நாளா அவனைப் பார்க்காம, பேசாம தவிச்சுக்கிட்டிருந்த. அவனும் ஜம்பமா நீ இறங்கி வந்தாதான் ஆச்சுன்னு பிடிவாதமா இருந்தான். ஊடல் அளவுக்கு மீறிப் போச்சுன்னா நிரந்தரப் பிரிவில கொண்டு விடும்னு உங்க ரெண்டு பேருக்கும் புரியல. அதனால அவன் வரச் சொன்னதா உங்கிட்ட சொல்லியும், நீ வரச் சொனதா அவன்கிட்ட சொல்லியும் ஒரு டிராமா போட்டு உங்க ஊடலை நான் முடிச்சு வைக்க வேண்டி இருக்கு!' என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் லதா.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 131</b></div><div style="text-align: center;"><b>புலவி (பொய்க் கோபம்)</b></div></div></div><div><b>குறள் 1302<br /></b><div><div><div>உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது</div><div>மிக்கற்றால் நீள விடல்.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/03/1303.html" target="_blank">குறள் 1303</a><br /><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/03/1301.html" target="_blank">குறள் 1301</a></b></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-42807212533582961372024-03-04T08:33:00.000-08:002024-03-24T05:08:33.253-07:001301. இரண்டு நாள் தண்டனை!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl44i1ZuqIDzpgSR9_hYNmZaEQ1HUp0LoFceO9SxPlztvASTc3mT3GPFgo_MiENmbnlLGn8Fuft4hxr07OH-qBO034a2Qiqp7J5uDOkx_6dQ8Swr8eIjJ508dWad0qIru7ZlXvUb-YrqusxSTeisbOjpDfaXeYMbyimN1-uqG5nIhYd8V07NMFWib2UG0/s275/images.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" height="133" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl44i1ZuqIDzpgSR9_hYNmZaEQ1HUp0LoFceO9SxPlztvASTc3mT3GPFgo_MiENmbnlLGn8Fuft4hxr07OH-qBO034a2Qiqp7J5uDOkx_6dQ8Swr8eIjJ508dWad0qIru7ZlXvUb-YrqusxSTeisbOjpDfaXeYMbyimN1-uqG5nIhYd8V07NMFWib2UG0/w200-h133/images.jpg" width="200" /></a></div>"ரெண்டு நாள்ள வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனீங்க. பத்து நாள் ஆயிடுச்சு!" என்றாள் மல்லிகா கோபத்துடன்.<p></p><p>"என்ன செய்யறது மல்லிகா? வியாபார விஷயமாப் போனா வேலை முடிஞ்சப்புறம்தானே திரும்ப முடியும்?" என்றான் குமரன்.</p><p>"வரத்துக்கு லேட்டாகும்னா போட்டுருக்கலாம் இல்ல? வீட்டில ஒருத்தி காத்துக்கிட்டிருக்காங்கற நினைப்பே உங்களுக்கு இல்லையா?"</p><p>"வேலை மும்முரத்தில எதுவுமே செய்ய முடியல. போஸ்ட் ஆஃபீசுக்குப் போய் இன்லாண்ட் லெட்டர் வாங்கக் கூட நேரம் இல்ல. நான் தங்கி இருந்த ஓட்டல்லேந்து போஸ்ட் ஆபீஸ் ரொம்ப தூரம் வேற!"</p><p>"இந்த நொண்டிச் சாக்கெல்லாம் வேண்டாம். இன்லாண்ட் லெட்டர் எல்லாம் பெட்டிக் கடையிலேயே விப்பாங்களே! பத்து பைசா அதிகம் கொடுத்து வாங்கணும். அவ்வளவுதானே? உங்களுக்கு என் மேல கொஞ்சமாவது அக்கறை இருந்தா எப்படியாவது லெட்டர் போட்டிருப்பீங்க!"</p><p>"ஐயோ, மல்லிகா! உனக்கு எப்படி் புரிய வைக்கறதுன்னே தெரியலியே! தினமுமே இன்னிக்கு வேலை முடிஞ்சுடும், ராத்திரியே ஊருக்குக் கிளம்பிடலாம்னுதான் நினைப்பேன். இப்படியே தள்ளிப் போய் பத்து நாள் ஆயிடுச்சு."</p><p>"பத்து நாள் ஆயிடுச்சு இல்ல? இன்னும் ரெண்டு நாள் ஆனாப் பரவாயில்ல."</p><p>"அப்படின்னா?"</p><p>"ரெண்டு நாளைக்கு என் பக்கதிலேயே வராதீங்க!"</p><p>"ரெண்டு நாளா? ஓ, அதுவா? அது எப்படி? நான் கிளம்பறத்துக்கு முதல் நாள்தானே தலைக்குக் குளிச்ச?"</p><p>"அதுவும் இல்ல, இதுவும் இல்ல. நீங்க பத்து நாள் என்னைத் தவிக்க வச்சதுக்காக உங்களுக்கு நான் கொடுக்கற தண்டனை இது!"</p><p>"என்ன மல்லிகா இது? சின்னக் குழந்தை மாதிரி!" என்றபடியே மல்லிகாவின் அருகில் வந்தான் குமரன்.</p><p>"வராதீங்கன்னா, வராதீங்க! அவ்வளவுதான்!" என்றாள் மல்லிகா.</p><p>அவள் முகத்தில் பொங்கிய கோபத்தைக் கண்டு குமரன் கொஞ்சம் பயந்து விட்டான்.</p><p>"சரி" என்றான் பலவீனமாக.</p><p><span style="font-size: large;">கு</span>மரன் முன்னறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது பின்பக்கமாக வந்து அவன் கழுத்தைத் தன் கைகளால் சுற்றி வளைத்தாள் மல்லிகா.</p><p>"அப்பா! கோபம் தீர்ந்து போச்சா? பயந்துட்டேன்!" என்றான் குமரன் மகிழ்ச்சியுடன்.</p><p>"கோபமெல்லாம் எதுவும் இல்ல. நான் பத்து நாளா உங்களைப் பிரிஞ்ச தவிச்ச மாதிரி நீங்களும் தவிக்கறதைக் கொஞ்சநேரம் பாக்கணும்னு ஆசைப்பட்டேன். அவ்வளவுதான். நீங்க என் பக்கத்தில வர முடியாம தவிக்கறதைப் பாக்கறப்ப எனக்கே பாவமா இருந்தது. அதனாலதான் ரெண்டு நாள்ங்கறதை ரெண்டு மணி நேரமாக் குறைச்சுட்டேன்!" என்றாள் மல்லிகா சிரித்தபடி.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 131</b></div><div style="text-align: center;"><b>புலவி (பொய்க் கோபம்)</b><br /></div></div></div><div><b>குறள் 1301<br /></b><div><div><div>புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்</div><div>அல்லல்நோய் காண்கம் சிறிது.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>(ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/03/1302.html" target="_blank">குறள் 1302</a><br /><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/03/1300.html" target="_blank">குறள் 1300</a></b></div><div style="text-align: center;"><br /></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-5185806439075757042024-03-03T18:58:00.000-08:002024-03-04T08:34:51.319-08:001300. என் மனம் என் சொல்லைக் கேட்பதில்லை!<p></p><div class="separator" style="clear: both; text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjteIh47t27Sw_f4NN0mx4hlgA_LXNqWs9oehyphenhyphenfiObjS3vMiMJ0V-oZTpiHC-1K3JxaRTD_3AVRevT2qjS5CJ_38ztRwDz23ZHfPtu90xPL6AjAFalSo1AdgNWKPpCdyf1g3JyZeSKQ-GbhjceZHxy_tvHFIkmMpSzmhA0cM0NKES33oJhyphenhyphenUm67bh7wERU/s275/1300.jpeg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" height="183" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjteIh47t27Sw_f4NN0mx4hlgA_LXNqWs9oehyphenhyphenfiObjS3vMiMJ0V-oZTpiHC-1K3JxaRTD_3AVRevT2qjS5CJ_38ztRwDz23ZHfPtu90xPL6AjAFalSo1AdgNWKPpCdyf1g3JyZeSKQ-GbhjceZHxy_tvHFIkmMpSzmhA0cM0NKES33oJhyphenhyphenUm67bh7wERU/s1600/1300.jpeg" width="275" /></a></div>"ஏண்டி சகுந்தலையோட திருமணத்துக்கு வரலை?" என்றாள் அங்கயற்கண்ணி.</div><p></p><p></p><p>"உனக்குத்தான் என் நிலைமை தெரியுமே! நான் வீட்டை விட்டு எங்கேயும் வெளியிலேயே போறதில்ல" என்றாள் பங்கஜவல்லி.</p><p>"உன் கணவரைப் பிரிஞ்சருக்கறதால நீ வருத்ததில இருக்கறது எல்லாருக்கும் தெரியும். அதுக்காக தோழியோட திருமணத்துக்குக் கூட வராம இருக்கலாமா? சகுந்தலை உன் மேல வருத்தப்பட மாட்டாளா?"</p><p>"போன மாசம் நடந்த குமுதாவோட வளைகாப்புக்கு நான் போகாத்துக்கே அவ ன் மேல ரொம்ப கோவமா இருக்கா. அப்படி இருக்கறப்ப தன்னோட திருமணத்துக்கு வராம இருந்ததுக்காக சகுந்தலை கோபப்பட மாட்டாளா என்ன?"</p><p>"அப்புறம் ஏன் இப்படி இருக்கே? திருமணத்துக்கு வந்திருந்தா உன் மனசுக்கு ஒரு மாறுதலா இருந்திருக்கும். சகுந்தலைக்கும் சந்தோஷமா இருந்திருக்கும் இல்ல?"</p><p>சற்று நேரம் மௌனமாக இருந்த பங்கஜவல்லி, "நானும் அப்படித்தான் சொன்னேன். அது கேக்கலையே!" என்றாள்.</p><p>"எது கேக்கல?"</p><p>"என் மனசுதான்! அவர் என்னை விட்டுப் பிரிஞ்சதிலேந்து நான் துயரத்திலதான் இருக்கணும்னு என் மனசு முடிவு பண்ணிடுச்சு. நான் கொஞ்ச நேரமாவது அந்தத் துயரத்தை மறந்துட்டு வேற எதிலேயாவது ஈடுபடலாம்னு முயற்சி செஞ்சா என் மனசு அதை அனுமதிக்கிறதில்ல. மாட்டைக் கட்டிப் போட்டிருக்கறப்ப, அது கொஞ்சம் இந்தப் பக்கமோ, அந்தப் பக்கமோ அசைய முயற்சி பண்ணினா, அதைக் கட்டி இருக்கிற கயிறு அதைப் பிடிச்சு இழுக்கும் இல்ல, அது மாதிரிதான் என் மனசு என்னோடசோகத்திலேந்து என்னால கொஞ்சம் கூட விலக முடியாம என்னைப் பிடிச்சு இழுத்துக்கிட்டே இருக்கு. என் மனசே எனக்கு விரோதமா நடந்துக்கறப்ப எனக்கு நெருக்கமா இருந்த மத்தவங்க என் மேல கோவமா இருக்கறதைப் பத்தி நான் என்ன சொல்ல முடியும்?" என்றாள் பங்கஜவல்லி விரக்தியுடன்.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 130</b></div><div style="text-align: center;"><b>நெஞ்சொடு புலத்தல்</b><br /></div></div></div><div><b>குறள் 1300<br /></b><div><div><div>தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய</div><div>நெஞ்சம் தமரல் வழி.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/03/1301.html" target="_blank">குறள் 1301</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/03/1299.html" target="_blank">குறள் 1299</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-60131522835607048982024-03-03T08:41:00.000-08:002024-03-03T19:05:43.187-08:001299. வேறு யார் உதவுவார்கள்?<p></p><div class="separator" style="clear: both; text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzeyZRfHdcCAN0e_Uc1TPzxeUVFcwfOPFZok776Rz2D5C3R1elz9IIv1xlRRDILdZAlWQshSvcj4tcorJAHflBSyQ7yG0HN70cyY4jzdob-3VuOFeM-q7aBs72fidWBMVniwVdRfhitOLfyWvpUxmI8xPm-l6DtVioSk0aDshu31RKW3m-INp5lCbFhQ0/s248/1299.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="203" data-original-width="248" height="164" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzeyZRfHdcCAN0e_Uc1TPzxeUVFcwfOPFZok776Rz2D5C3R1elz9IIv1xlRRDILdZAlWQshSvcj4tcorJAHflBSyQ7yG0HN70cyY4jzdob-3VuOFeM-q7aBs72fidWBMVniwVdRfhitOLfyWvpUxmI8xPm-l6DtVioSk0aDshu31RKW3m-INp5lCbFhQ0/w200-h164/1299.jpg" width="200" /></a></div>இரண்டு ஜாமங்கள் முடிந்து மூன்றாம் ஜாமம் துவங்கிய பிறகும் வசந்தமுல்லைக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களாகவே இப்படித்தான். இரவில் தூக்கம் இல்லாததால் பகலில் சோர்வு.</div><p></p><p>வசந்தமுல்லையின் நிலைமையைக் கண்டு கவலை கொண்ட அவள் தாய் மீனாம்பாள் அவளை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றா.</p><p>வசந்தமுல்லையின் நாடியைப் பரிசோதித்த மருத்துவர், "உடலுக்கு ஒன்றும் இல்லையம்மா. மனக்கவலையால்தான் உங்கள் மகளின் உடல் பாதிப்படைந்திருக்கிறது. மனத்தில் உள்ள துயரையோ, கவலையையோ மாற்றிக் கொண்டால் அவள் உடல் சரியாகி விடும்" என்றார் மீனாம்பாளிடம்..</p><p>"ஐயா! என் கணவர் என்னை விட்டுப் பிரிந்து தொலைதூரம் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வரப் பல மாதங்கள் ஆகும். என்னால் எப்படித் துயரப்படாமல் இருக்க முடியும்?" என்றாள் வசந்தமுல்லை.</p><p>"மருத்துவரிடம் பேசும் பேச்சா இது?" என்று மீனாம்பாள் மகளைக் கடிந்து கொண்டாள்.</p><p>"உங்கள் மகள் கேட்பதில் ஒன்றும் தவறில்லை அம்மா! அவளுக்கு நான் விளக்குகிறேன்" என்ற மருத்துவர், வசந்தமுல்லையிடம் திரும்பி, "உன் கணரின் பிரிவை எண்ணி உன்னால் துயரப்படாமல் இருக்க முடியாதுதான். ஆனால் உன் மனத்தை வேறு திசைகளில் திருப்பி உன்னால் உன் துயரைக் குறைத்துக் கொள்ள முடியும்" என்றார்.</p><p><span style="font-size: large;">வீ</span>ட்டுக்கு வந்த வசந்தமுல்லை இரவு படுக்கச் செல்லுமுன், "மருத்துவர் என்ன சொன்னார் என்று கேட்டாய் அல்லவா? உன்னைத் திசைதிருப்பினால் என்னால் என் துயரைக் குறைத்துக் கொள்ள முடியுமாம். நானும் உன்னை வேறு திசைகளில் திருப்ப எவ்வளவோ முயற்சி செய்கிறேன். ஆனால் நீ பிடிவாதமாக என்னை விட்டு விட்டுப் போனவருடைய நினைவையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறாய். எனக்கு ஒரு துயரம் வரும்போது, நீ எனக்குத் துணையாக இல்லாமல், நான் எவ்வளவு முயன்றும் வேறு திசைகளில் உன் கவனத்தைச் செலுத்தாமல், அவருடைய நினைவுகளிலேயே ஆழ்ந்து என் துயரத்தை இன்னும் அதிகமாக அல்லவா ஆக்கிக் கொண்டிருக்கிறாய்! நீயே எனக்கு உதவாவிட்டால் பின் வேறு யார் எனக்கு உதவுவார்கள்?" என்றாள் தன் மனத்திடம்.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 130</b></div><div style="text-align: center;"><b>நெஞ்சொடு புலத்தல்</b><br /></div></div></div><div><b>குறள் 1299<br /></b><div><div><div>துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய</div><div>நெஞ்சந் துணையல் வழி.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/03/1300.html" target="_blank">குறள் 1300</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1298.html" target="_blank">குறள் 1298</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-73079018119201442642024-02-19T09:10:00.000-08:002024-03-03T08:56:07.455-08:001298. ஒரு வீரனின் பெருமைகள்!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlJErHhVFXOl0heQiRYISkLJW_VL_icvilMWhuFLYwinF3AohJ3iIbiNATyT_FlhnGG702adrbPhuJc2Kwm_Q5iMFNlak4B4vkc39wznrF37G3m5Atzrs20AjAWjOlwCAYsA_BixJ4wShZnm6DyRw7uDpMZyQ2di1yKUv6U9yBcI1d-gY1qB4kpzl1o2Y/s278/images.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="182" data-original-width="278" height="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlJErHhVFXOl0heQiRYISkLJW_VL_icvilMWhuFLYwinF3AohJ3iIbiNATyT_FlhnGG702adrbPhuJc2Kwm_Q5iMFNlak4B4vkc39wznrF37G3m5Atzrs20AjAWjOlwCAYsA_BixJ4wShZnm6DyRw7uDpMZyQ2di1yKUv6U9yBcI1d-gY1qB4kpzl1o2Y/s1600/images.jpg" width="278" /></a></div>"அவர் எப்படிப்பட்ட வீரர் தெரியுமா? போர்க்களத்தில வாளைச் சுழட்டிக்கிட்டுப் போனார்னா எதிரிங்கள்ளாம் அலறி அடிச்சுட்டு ஓடுவாங்களாம்!"<p></p><p>"இதை யார் சொன்னது? ஓடிப் போன எதிரிகள்ள யாராவது சொன்னாங்களா?"</p><p>"என்ன கேலியா? அவரு மார்பில இருந்த விழுப்புண்களைப் பாத்திருக்க இல்ல?"</p><p>"பாத்திருக்கேன். நான் பாக்காம வேற யார் பாப்பாங்க? ஆனா எதிரிங்கள்ளாம் பயந்து ஓடினாங்கன்னு சொல்ற. அப்ப அவரைக் காயப்படுத்தினது யாரு? ஒருவேளை தன்னோட வாளாலேயே தெரியாம குத்திக்கிடாரோ?"</p><p>"அதை விடு. அவருடைய குணங்களைப் பத்திப் பேசுவோமா? அவரு எவ்வளவு கருணை உள்ளவர் தெரியுமா?"</p><p>'அந்தக் கருணையை இந்தக் காதலிகிட்டேயும் கொஞ்சம் காட்டி இருக்கலாம்!'</p><p>"என்ன முணுமுணுக்கற?"</p><p>"இல்ல. மேல சொல்லு!"</p><p>"அவரோட கருணையைப் பத்தி எவ்வளவு பேரு புகழ்ந்திருக்காங்க தெரியுமா?"</p><p>"அதுதான் சொல்லிட்டியே! அப்புறம்?"</p><p>"அப்புறம் அவரோட கொடை!"</p><p>"கொடைங்கறதும் கருணைக்குக் கீழே வந்துடுமே!"</p><p>"நீ என்ன சொல்ல வர? உன் காதலரைப் பத்திப் பெருமையா எதுவுமே பேசக் கூடாதுங்கறியா?"</p><p>"ஓ, அவர் என்னோட காதலரா? நீ எத்தனை நேரம் பேதைப் பார்த்தா அவர் உன்னோட காதலர் மாதிரி இல்ல இருந்தது?"</p><p>"உன்னோட காதலர்னாலும் அவர்கிட்ட எனக்குத்தானே நெருக்கம் அதிகம்?"</p><p>"ஆமாண்டி. அவரைத் தூக்கி என் நெஞ்சில வச்சேன் இல்ல, அதுதான் நீயே அவரை சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சுட்ட!"</p><p>"உன்னைப் பிரிஞ்சிருக்கார்ங்கறதால அவர் மேல உனக்கு இருக்கற கோபம் எனக்குப் புரியுது. அவரோட பிரிவு உன்னை விட என்னைத்தானே அதிகம் பாதிக்கும்? ஆனா அவரைக் குறை சொன்னா அது என்னை நானே தாழ்த்திக்கற மாதிரிங்கறதாலதானே அவரோட பெருமைகளைப் பேசிக்கிட்டிருக்கேன்!"</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 130</b></div><div style="text-align: center;"><b>நெஞ்சொடு புலத்தல்</b><br /></div></div></div><div><b>குறள் 1298<br /></b><div><div><div>எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்</div><div>உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/03/1299.html" target="_blank">குறள் 1299</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1297.html" target="_blank">குறள் 1297</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-43614649283074955362024-02-18T20:06:00.000-08:002024-02-19T09:11:27.565-08:001297. நெஞ்சே, நீசொல்!<p></p><div class="separator" style="clear: both; text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg__LktMggrPhyLx0PfPNzV9ntYIVZWolV_lpdMYDYpMC6sVOcnqisDGtRKgbMYF4oWfqZZKR6Df4CatWbVQnj83Scgu-Gxov0oQB6RAALFipm3HsohsQA1TxUAtfU8rJK_5JnwRsIihje7wY589X9OpcW7YGh7H2NZuqwBoKX84t-h1waOidUUbxsC-3Y/s264/1297.jpeg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="191" data-original-width="264" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg__LktMggrPhyLx0PfPNzV9ntYIVZWolV_lpdMYDYpMC6sVOcnqisDGtRKgbMYF4oWfqZZKR6Df4CatWbVQnj83Scgu-Gxov0oQB6RAALFipm3HsohsQA1TxUAtfU8rJK_5JnwRsIihje7wY589X9OpcW7YGh7H2NZuqwBoKX84t-h1waOidUUbxsC-3Y/s1600/1297.jpeg" width="264" /></a></div>திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே சுரஞ்சனியை விட்டுப் பிரிந்து வியாபாரத்துக்காக வெளியூர் சென்று விட்ட அவள் கன் சத்யகீர்த்தி ஊர் திரும்பப் போகிறான் என்பதுதான் அந்தச் சிற்றூரில் அன்றைய முக்கியச் செய்தி.</div><p></p><p>சத்யகீர்த்திடன் சென்ற அவன் நண்பன் குணாளன் முதல்நாளே ஊர் திரும்பி விட்டான். அவன் கொண்டு வந்த செய்திதான் அது. </p><p>சத்யகீர்த்தி மட்டும் அருகிலிருந்த நகரத்தில் தன் நண்பன் வீட்டில் தங்கி விட்டு சுரஞ்சனிக்கும் மற்றவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு அடுத்த நாள் மாலை ஊருக்குத் திரும்புவான் என்று ச்ரஞ்சனியின் வீட்டில் வந்து தெரிவித்து விட்டுப் போயிருந்தான் குணாளன்.</p><p>கணவனைப் பிரிந்த இத்தனை மாதங்களும் சரியாக உண்ணாமல், உறங்காமல், அலங்காரம் செய்து கொள்ளாமல் பொலிவிழந்து வாழ்ந்து கொண்டிருந்த சுரஞ்சனி காதலன் வருகிறான் என்றதும் தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டு தயாராக இருந்தாள்.</p><p>மாலை வந்ததும் தன் வீட்டு வாசலில் வந்து நின்றாள் சுரஞ்சனி. தெருவில் பல வீடுகளிலிருந்தும் அவளைப் பார்த்த சிலர் அவளைக் கேலி செய்து பேசத் தொடங்கினர். அவற்றைப் பொருட்படுத்தாமல் தெருமுனையைப் பார்த்தபடியே நின்றாள் சுரஞ்சனி.</p><p>தெருமுனையில் சத்யகீர்த்தியின் கம்பீரமான உருவம் தெரிந்தது.</p><p>தன் வீட்டு வாசலில் நின்றிருந்த சுரஞ்சனி வேகமாகத் தெருமுனைக்கு ஓடினாள். காதலன் அருகில் சென்றதும் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து அவன் மார்பைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.</p><p>சத்யகீர்த்தி அவளை ஆதரவுடன் அணைத்தபடி வீட்டுக்கு அழைத்து வந்தான்.</p><p>வீட்டுக்கு வந்ததும் சத்யகீர்த்தி முகம் கழுவிக் கொள்ளப் பின்கட்டுக்குச் சென்றதும், சுரஞ்சனியின் தாய், "ஏண்டி, இப்படியா வெட்கத்தை விட்டு நடந்துப்ப? தெருவில எல்லாரும் பார்த்துக் கேலி பண்றாங்க பாரு! உன் பெண்ணுக்கு வெக்கம் இல்லையான்னு எங்கிட்ட கேப்பாங்க. அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது?" என்று தன் மகளைக் கடிந்து கொண்டாள்.</p><p>தலையைக் குனிந்து தன் நெஞ்சைப் பார்த்த சுரஞ்சனி, "ஏ,நெஞ்சே! அம்மா கேக்கறாங்க பாரு. பதில் சொல்லு. உன்னோட சேர்ந்து நானும் இல்லாம வெக்கம் இல்லாம நடந்துக்கிட்டேன்?' என்றாள்.</p><p> தன் செய்கையை நினைத்து வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டதாக நினைத்த சுரஞ்சனியின் தாய் "சரி,பரவாயில்ல. விடு" என்றாள்.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 130</b></div><div style="text-align: center;"><b>நெஞ்சொடு புலத்தல்</b><br /></div></div></div><div><b>குறள் 1297<br /></b><div><div><div>நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்</div><div>மாணா மடநெஞ்சிற் பட்டு.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1298.html" target="_blank">குறள் 1298 </a></b></div><div style="text-align: center;"><b style="text-align: left;"><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1296.html" target="_blank">குறள் 1296</a></b></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-61561335904390664772024-02-18T08:43:00.000-08:002024-02-18T20:08:15.030-08:001296. தோழியின் உடல்நலக் குறைவு <p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1lbRhPcjs1vMDYIwxm0l823_Y3VxfdWy6PdEukLKeb4JV71lqACXGd9Pw0GKqBKvok_FmJMJT36qnozD4_Xj7zzLrHoKLG6u5l9u95f82udQvhU0_ctlM8ivFAjn3d8vs5gaBOgMrjPnBnZ7IQl8ojwlmov4-MmX21zpuhkVAQ66g58tInfOiP7uLiCQ/s262/1296.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="192" data-original-width="262" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1lbRhPcjs1vMDYIwxm0l823_Y3VxfdWy6PdEukLKeb4JV71lqACXGd9Pw0GKqBKvok_FmJMJT36qnozD4_Xj7zzLrHoKLG6u5l9u95f82udQvhU0_ctlM8ivFAjn3d8vs5gaBOgMrjPnBnZ7IQl8ojwlmov4-MmX21zpuhkVAQ66g58tInfOiP7uLiCQ/s1600/1296.jpg" width="262" /></a></div>அகிலா, தமயந்தி இருவரும் உடல் நலம் குன்றியிருந்த தங்கள் தோழி பரிமளாவைப் பார்க்கச் சென்றனர். <p></p><p>கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த தோழியைப் பார்த்ததும் இருவருக்குமே மனம் பொறுக்கவில்லை. </p><p>கயிற்றுக் கட்டிலில் பிணைக்கப்படிருந்த கயிறுகளுடன் இன்னொரு கயிறு போல் படுத்துக் கொண்டிருந்தாள் பரிமளா. உடல் அந்த அளவுக்கு இளைத்திருந்தது.</p><p>அறைக்கு வெளியே வந்ததும் பரிமளாவின் தாயிடம், "என்னம்மா இப்படி எலும்பும் தோலுமா ஆயிட்டா?" என்றாள் தமயந்தி.</p><p>"என்னத்தைச் சொல்றது? ஏதோ பெயர் தெரியாத வியாதியாம். அது உடம்புக்குள்ள இருந்துக்கிட்டு அவளையே தின்னுக்கிட்டிருக்காம். சரியாகுமா ஆகாதேன்னே தெரியல. வைத்தியருக்கே பிடிபடல. கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு உக்காந்திருக்கேன்" என்றாள் பரிமளாவின் தாய்.</p><p>வெளியில் வந்ததும், "என்னடி இது? வியாதி உள்ளுக்குள்ளே இருந்துக்கிட்டு மனுஷங்களைத் தின்னுமா என்ன? நான் கேள்விப்பட்டதே இல்லையே!" என்றாள் அகிலா.</p><p>" கேள்விப்படறது என்ன? நான் அனுபவிச்சே இருக்கேன்" என்றாள் தமயந்தி.</p><p>"அனுபவிச்சிருக்கியா? என்னடி சொல்ற? உனக்கு இது மாதிரி வந்ததா என்ன? எனக்குத் தெரியாதே!" என்றாள் அகிலா வியப்புடன்.</p><p>"என் சொந்தக்காரர் ஒத்தருக்கு இப்படி வந்ததுன்னு எங்கம்மா சொல்லி இருக்காங்க. அதைத்தான் சொன்னேன்!" என்ற தமயந்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்திருந்த காலத்தில் தன் நெஞ்சு உள்ளிருந்து கொண்டு தன்னை நாள்தோறும் அணு அணுவாகத் தின்று கொண்டிருந்த அனுபவத்தை நினைத்துப் பார்த்துத் தன்னை அறியாமல் அதை வெளிப்படுத்தி விட்டதற்காகத் தன்னையே உள்ளூரக் கடிந்து கொண்டாள்.</p><p>'நல்ல வேளை. எதையோ சொல்லிச் சமாளிச்சுட்டேன். என் நெஞ்சு என்னைத் தின்ன அனுபவத்தை நான் சொன்னா இவ அதைப் புரிஞ்சுக்கவா போறா?' என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் தமயந்தி.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 130</b></div><div style="text-align: center;"><b>நெஞ்சொடு புலத்தல்</b><br /></div></div></div><div><b>குறள் 1296<br /></b><div><div><div><div>தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்</div><div>தினிய இருந்ததென் நெஞ்சு.</div></div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>காதலரைப் பிரிந்து தனியே இருந்து (அந்தப் பிரிவின் கொடுமையை) நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போன்ற துன்பம் ஏற்பட்டது.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1297.html" target="_blank">குறள் 1297</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1295.html" target="_blank">குறள் 1295</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-7886558329751141892024-02-17T07:02:00.000-08:002024-02-18T08:48:01.552-08:001295. பெண் மனம்!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguLRM4FguhxJzrhDso3dH_fwA41xejwFg520osgdnwL2-4r3Ez_T_rjIWIS42CF-063lHGHwaqvLO8KjikNr1MW7RvDTPf85y0OT_dSxxOuXIMIiP7t91S8qC2pYSyuSKvBOV90t1xEQt0-ZZCT6jCS9akpxPT8kkiPryIsxCCaFapA0me2YDBkqyIxVw/s3200/output.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2488" data-original-width="3200" height="156" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguLRM4FguhxJzrhDso3dH_fwA41xejwFg520osgdnwL2-4r3Ez_T_rjIWIS42CF-063lHGHwaqvLO8KjikNr1MW7RvDTPf85y0OT_dSxxOuXIMIiP7t91S8qC2pYSyuSKvBOV90t1xEQt0-ZZCT6jCS9akpxPT8kkiPryIsxCCaFapA0me2YDBkqyIxVw/w200-h156/output.jpg" width="200" /></a></div> "இவ்வளவு நாளா ஒரே சோகமா இருந்த. இன்னிக்கு உன் புருஷன் வரப்போறாங்கறதாலதான் உன் முகத்தில இவ்வளவு சந்தோஷம்! என்றாள் நாகம்மை தன் மகள் நப்பின்னையைப் பார்த்து.<p></p><p>"எனக்குக் கூட இத்தனை நாளா உன் முகத்தைப் பாக்கவே கஷ்டமா இருந்தது. இப்ப உன் முகத்தில இருக்கற மலர்ச்சியைப் பார்த்தப்புறம்தான் எனக்கே மனசு ஆறுதலா இருக்கு!" என்றார் நப்பின்னையின் தந்தை வேலவன்</p><p>நப்பின்னை பெற்றோர் பேச்சைக் கேட்டு சற்றே கூச்சத்துடன் உள்ளே போனாள். </p><p>"அரண்மனையில வேலை செய்யறவனாச்சேன்னு ரொம்பப் பெருமையா பொண்ணைக் கட்டி வச்சேன். ஆனா வருஷம் முழுக்க அரண்மனையே கதின்னு கிடந்துட்டு எப்பவாவதுதான் வீட்டுக்கு வருவான்னு அப்ப தெரியல!" என்று வேலவன் மெல்லிய குரலில் தன் மனைவியிடம் கூறியது நப்பின்னையின் காதில் விழவில்லை.</p><p><span style="font-size: large;">"எ</span>ன்னம்மா! புருஷன் வந்துட்டான். இப்ப சந்தோஷம்தானே?" என்றார் வேலவன் நப்பின்னையைப் பார்த்து.</p><p>நப்பின்னை ஏதும் பதில் கூறாமல் உள்ளே சென்று விட்டாள்.</p><p>"ஏன் பதில் சொல்லாம போறா? அதோட ஒரு மாதிரியா இருக்காளே, ஏன்?" என்றார் வேலவன் தன் மனைவியிடம்.</p><p>"இன்னும் ஒரு வாரத்தில திரும்பிப் போயிடுவாரு இல்ல? அதை நினைச்சு இப்பவே வருத்தப்பட ஆரம்பிச்சுட்டா!" என்றாள் நாகம்மை.</p><p>"இது என்ன கூத்தா இருக்கு? இத்தனை நாளா புருஷன்காரன் வெளியூர்ல இருக்கானேன்னு நினைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டிருந்தா. இன்னிக்குப் புருஷன் ஊர்லேந்து வந்ததும் அதுக்காக சந்தோஷப்படாம இன்னும் ஒரு வாரத்தில ஊருக்குப் போயிடுவாரேன்னு கவலைப்படறா!" என்றார் வேலவன்.</p><p>"பொம்பளைங்க மனசு அப்படித்தான். நமக்குக் கல்யாணம் ஆன புதுசுல நீங்க வந்துட்டு வந்துட்டுப் போயிக்கிட்டே இருப்பீங்களே, அப்ப நானும் அப்படித்தான் இருந்தேன். உங்களுக்கெல்லாம் அது எங்கே புரியப் போகுது?" என்றாள் நாகம்மை.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 130</b></div><div style="text-align: center;"><b>நெஞ்சொடு புலத்தல்</b><br /></div></div></div><div><b>குறள் 1295<br /></b><div><div><div>பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்</div><div>அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1296.html" target="_blank">குறள் 1296</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1294.html" target="_blank">குறள் 1294</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-62827396235270582612024-02-16T08:46:00.000-08:002024-02-17T07:05:34.516-08:001294. உனக்குப் புரியாது!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOiGKECcZvcaqTzauxPXvJ11qBr9HO0RMbR5HXQGD-zhObA2wet3xW9rZlIBgIBS9kJrvsq2uJvJBc1JbfUfJgiGDLTD9cWMLWu9ww0a_8q5iKj8zrPQqGr2RQyTQW1qzqSwWRHOWonyxnycivkQkti_BHkFdG_QrvUEAWODA0tkYb2kw8mw8DOE7n1DM/s225/1294.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="225" data-original-width="225" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOiGKECcZvcaqTzauxPXvJ11qBr9HO0RMbR5HXQGD-zhObA2wet3xW9rZlIBgIBS9kJrvsq2uJvJBc1JbfUfJgiGDLTD9cWMLWu9ww0a_8q5iKj8zrPQqGr2RQyTQW1qzqSwWRHOWonyxnycivkQkti_BHkFdG_QrvUEAWODA0tkYb2kw8mw8DOE7n1DM/s1600/1294.jpg" width="225" /></a></div>இதற்கு முன்னால் இப்படி நடந்ததில்லை. ஷாலினியும் சந்தனுவும் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொள்வார்கள். கோபித்துக் கொண்டு பிரிவார்கள். ஆனால் அன்று இரவே ஒரு சில குறுஞ்செய்திகளில் அவர்கள் சண்டை தீர்ந்து சமாதானமாகி விடுவாரகள்.<p></p><p>ஆனால் இந்த முறை நான்கு நாட்கள் ஆகியும் இருவருக்கும் இடையிலான பிணக்கு தீரவில்லை. சண்டை போட்டுக் கொண்ட அன்று இரவு பேசி வைத்துக் கொண்டது போல இருவருமே மற்றவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பாமல் வீம்பாக இருந்தனர்.</p><p>அதனால் நான்கு நாட்களாக நிலைமை அப்படியே இருந்து வந்தது. ஷாலினிக்கு இதைப் பற்றி யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. </p><p>சற்று நேரம் யோசித்த பிறகு அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. திரைப்படங்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ தங்கள் மனச்சாட்சியிடம் பேசுவது போல் காட்சிகள் வரும். அது போல் தானும் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அப்படிச் செய்து பார்த்தால் மனதில் ஒரு தெளிவு இருக்கும் என்று நினைத்தாள். </p><p>ஆனால் மனச்சாட்சிக்கு பதிலாகத் தன் மனத்துடன் பேசலாம் என்று தோன்றியது. இரண்டு நாற்காலிகளை எதிரெதிரே போட்டுக் கொண்டாள். ஒன்றில் தான் அமர்ந்து கொண்டு எதிர் நாற்காலியின் தன் மனம் அமர்ந்து கொண்டிருப்பது போல் கற்பனை செய்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.</p><p>"ஏண்டி மனமே, எல்லாம் உன்னால்தானே வந்தது? நீதானே அவனை விரும்பின? இப்ப அவனோட சண்டை போட்டு நாலு நாளா பேசாம இருக்கோம். இதை எப்படி சரி செய்யறதுன்னு சொல்லு!" என்றாள் ஷாலினி.</p><p>மனத்தின் பதிலாக அவள் மனதில் தோன்றியதை எதிரில் அமர்ந்திருக்கும் மனம் பேசுவதாக நினைத்துக் கேட்டாள்.</p><p>'நானா சண்டை போடச் சொன்னேன்? உன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம அவனோட வாதம் பண்ணின. அது சண்டையில போய் முடிஞ்சது. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?'</p><p>"இதுக்கு முன்னால சண்டை போட்டப்பல்லாம் அன்னிக்கு ராத்திரியே 'சாரி' ன்னு' மெசேஜ் அனுப்பி உடனே சமாதானமாயிட்டமே! ஆனா இந்தத் தடவை ஏன் அப்படி நடக்கல?"</p><p>'எனக்கு எப்படித் தெரியும்?'</p><p>"சாரின்னு ஒரு மெசேஜ் அனுப்புன்னு நீதானே உத்தரவு போடணும்?"</p><p>'உத்தரவு போட்டேனே! ஆனா நீதான் அதைக் கேக்கல. நான் சொன்னதை ஏன் கேக்கலேன்னு நீதான் சொல்லணும்?'</p><p>"உத்தரவு போட்டியா? அப்ப சரி!" என்று சொல்லிச் சிரித்தாள் ஷாலினி.</p><p>'ஏன் சிரிக்கற? அப்ப சரின்னா என்ன அர்த்தம்?'</p><p>"உனக்குப் புரியாது. காதலர்களுக்குள்ள ஊடல்னு ஒண்ணு இருக்கு. சண்டை போட்டுக்கிட்டு கொஞ்ச நாள் பேசாம இருப்போம். அப்புறம் கூடிப்போம். அதில ஒரு தனி இன்பம் இருக்கு. அந்த இன்பத்தை அனுபவிக்கணும்னுட்டுதான் 'சாரி' சொல்லாம அவனோட சண்டையை நீட்டிக்கிட்டிருக்கேன். இது எனக்கே இப்பதான் புரிஞ்சுது - உங்கிட்ட பேசினப்புறம் . போதும். நீ உள்ளே போ' என்றபடி மனம் 'அமர்ந்திருந்த' நாற்காலியை நகர்த்தினாள் ஷாலினி.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 130</b></div><div style="text-align: center;"><b>நெஞ்சொடு புலத்தல்</b><br /></div></div></div><div><b>குறள் 1294<br /></b><div><div><div>இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே</div><div>துனிசெய்து துவ்வாய்காண் மற்று.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1295.html" target="_blank">குறள் 1295</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1293.html" target="_blank">குறள் 1293</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-65234227513244575592024-02-16T05:14:00.000-08:002024-02-16T08:48:11.484-08:001293. மீண்டும் அரவிந்தன்!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf4xIdV-jxAmzHUZ-FobZONZ1Yv_Gx-aX9rs8PoKVGkTyemx7wwSSiqqNO51WT5KtfpuEp8TjFx2pLtJeviryMz6nxMrIeO4Xe0D-riBF8EJuZymBgN5paiQsKirvvSBvTFT4sTuTTa7_p0ZPg74n8qkhfOskc5G2ILLP2ldiP3-63mDFouRm_iDy1e5Y/s278/1293.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="278" data-original-width="182" height="278" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf4xIdV-jxAmzHUZ-FobZONZ1Yv_Gx-aX9rs8PoKVGkTyemx7wwSSiqqNO51WT5KtfpuEp8TjFx2pLtJeviryMz6nxMrIeO4Xe0D-riBF8EJuZymBgN5paiQsKirvvSBvTFT4sTuTTa7_p0ZPg74n8qkhfOskc5G2ILLP2ldiP3-63mDFouRm_iDy1e5Y/s1600/1293.jpg" width="182" /></a></div>அரவிந்தன் சந்தியாவைக் கடைசியாகச் சந்தித்து ஆறு மாதங்கள் இருக்கும். அதற்கு முனபு வரை அவளை அவன் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டுதான் இருந்தான். திடீரென்று சந்திப்புகள் குறைந்து பின்பு நின்றே போய் விட்டன.<p></p><p>சந்தியா அவன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து பேசியபோது, "ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணாதே!" என்று ஒரே வரியில் பதில் சொல்லி ஃபோனை வைத்து விட்டான்.</p><p>வேறு என்ன செய்வது? அவன் வீட்டு விலாசம் அவளுக்குத் தெரியாது. அவன் அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்க்கலாமா என்ற யோசனை தோன்றியது. அதை அவன் விரும்ப மாட்டான் என்பதால் அந்த யோசனையைக் கைவிட்டு விட்டாள்.</p><p>தற்செயலாக அரவிந்தனின் நண்பன் முத்துவை அவள் ஒரு முறை சந்தித்தபோது மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு அவன் சொன்னான்: "சாரி சந்தியா! நான் அரவிந்தோட நண்பன். ஆனா உங்க மேல இரக்கப்பட்டு இதைச் சொல்றேன். அவன் இப்ப வேற ஒரு பெண்ணோட பழகிக்கிட்டிருக்கான். இதுக்கு மேல என்னை ஒண்ணும் கேக்காதீங்க!"</p><p>சந்தியாவின் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. அரவிந்தன் இப்படி ஒரு காரியத்தைச் செய்வான் என்று அவளால் நம்ப முடியவில்லை. ஆனால் அவன் கடந்த சில நாட்களாக அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய்க் கொண்டிருந்ததை அவள் உணர்ந்து கொண்டுதான் இருந்தாள். இப்போது முத்து சொன்னதை வைத்துப் பார்த்தபோது எல்லாம் பொருந்திப் போவது போல்தான் தோன்றியது.</p><p>'ஏன் இப்படிச் செய்தான்? நான் ஏதாவது தவறு செய்து அதனால் என் மேல் கோபித்துக் கொண்டு என்னை விட்டு விலகி விட்டானா? அல்லது அவன் காதலில் உறுதி இல்லாத ஒரு பச்சோந்தியா?' அவளுக்குப் புரியவில்லை.</p><p>அரவிந்தனின் பிரிவுக்குப் பிறகு சந்தியா வாழ்க்கையை இயந்திரத்தனமாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவன் அளித்த ஏமாற்றம் அவள் மனதை விடாமல் அழுத்திக் கொண்டேதான் இருந்தது.</p><p>இந்தச் சூழ்நிலையில்தான் எதிர்பாராமல் அரவிந்தனிடமிருந்து அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. </p><p>"சாரி சந்தியா! நான் தப்பு பண்ணிட்டேன். ஆனா நீ என்னை மன்னிச்சுடுவேன்னு நினைக்கறேன். சீக்கிரமே நாம சந்திக்கலாம். ரெண்டு நாள்ள நானே ஃபோன் பண்றேன்" ன்றான் அவன்.</p><p>சென்ற முறை சுருக்கமாகப் பேசி ஃபோனை வைத்து போல்தான் இந்த முறையும் செய்தான்.</p><p>பல நாட்களாகத் தண்ணீர் இல்லாமல் வாடிக் கொண்டிருந்த செடி தண்ணீர் பட்டதும் சிலிர்ப்பது போல் சந்தியாவின் உள்ளத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.</p><p>அன்று வீட்டுக்குச் சென்றபோது அவள் அம்மா கேட்டாள்: </p><p>"கொஞ்ச நாளா எதையோ பறி கொடுத்தவ மாதிரி இருந்தே. என்னன்னு கேட்டப்ப ஒண்ணுமில்லேன்னுட்ட. ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்னையா இருக்கும்னு நினைச்சேன். இன்னிக்குத்தான் முகத்தில ஒரு சந்தோஷம் இருக்கு. ஆஃபீஸ்ல இருந்த பிரச்னை தீர்ந்து போச்சா? இல்லை புரொமோஷன் ஏதாவது கொடுத்திருக்காங்களா?"</p><p>"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன்" என்றாள் சந்தியா.</p><p>அறையில் வந்து தனியே உட்கார்ந்தபோது, 'பாவம்! அம்மாவை ஏமாத்தறமே!' என்ற எண்ணம் தோன்றியது.</p><p>'அம்மாவை மட்டுமா?' என்று மனதிலிருந்து இன்னொரு குரல். 'எந்த ஒரு காரணமும் இல்லாம திடீர்னு உன்னை அந்த அரவிந்தன் கைவிட்டுட்டான். அதை நினைச்சு இத்தனை நாளா நெருப்பில விழுந்த புழு மாதிரி துடிச்சுக்கிட்டிருந்த. இப்ப அவன் 'சாரி' ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் திரும்பக் கூப்பிட்டதும் அவன் பின்னால ஓடத் தயாரா இருக்கியே, அது ஏன்? உனக்கு அவனை விட்டா வேற துணை இல்லையா?'</p><p>மனதில் எழுந்த குரலை அழுத்தும் முயற்சியில் தொலைக்காட்சியின் ஒலியைப் பெரிதாக்கி அதில் கவனம் செலுத்தினாள் சந்தியா.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 130</b></div><div style="text-align: center;"><b>நெஞ்சொடு புலத்தல்</b><br /></div></div></div><div><b>குறள் 1293<br /></b><div><div><div>கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ</div><div>பெட்டாங்கு அவர்பின் செலல்.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ?</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1294.html" target="_blank">குறள் 1294</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1292.html" target="_blank">குறள் 1292</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-50502598778446483972024-02-15T09:05:00.000-08:002024-02-16T05:28:07.775-08:001292. அழைப்பு இல்லை!<p></p><div class="separator" style="clear: both; text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC7Dv-r8zxqIuI1rYEW2Tx_KASYBy_wyGCnmeHPX_5n3b_65ceQzm7atCdyLZQtYpP6auEjXrl9RWbq53fD_lPJnXuWQkKpGwviD4a7EIrwuhUEIZhqtHKR9Ho1f_QX9jnsY4H1aXV0i9cWhMH0tmPqJKeMAotIbINthyphenhyphenDW35aGQr7-ibYsBWb0T8B4CI/s262/download1292-1.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="192" data-original-width="262" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC7Dv-r8zxqIuI1rYEW2Tx_KASYBy_wyGCnmeHPX_5n3b_65ceQzm7atCdyLZQtYpP6auEjXrl9RWbq53fD_lPJnXuWQkKpGwviD4a7EIrwuhUEIZhqtHKR9Ho1f_QX9jnsY4H1aXV0i9cWhMH0tmPqJKeMAotIbINthyphenhyphenDW35aGQr7-ibYsBWb0T8B4CI/s1600/download1292-1.jpg" width="262" /></a></div>"ஏண்டி நம்ம காலேஜ்ல எத்தனையோ உன்னோட கடைக்கண் பார்வை தன் மேல படாதான்னு தவம் கிடக்கறாங்க. ஆனா நீ அவங்களையெல்லாம் விட்டுட்டு அந்த பிரகாஷ் பின்னால அலையறியே!" என்றாள் மஞ்சுளா.</div><p></p><p>"எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு!" என்றாள் ரூபா சுருக்கமாக.</p><p>'ஆனா அவனுக்கு உன்னைப் பிடிச்ச மாதிரி தெரியலையே!' என்று சொல்ல நினைத்த மஞ்சுளா தன் தோழியின் மனம் புண்படுமோ என்று நினைத்து மௌனமாக இருந்தாள்.</p><p><span style="font-size: large;">"நே</span>த்திக்கு சாயந்திரம் கங்கே போயிருந்தே? ஃபோன் பண்ணினேன். எடுக்கவே இல்லையே!" என்றாள் ரூபா.</p><p>"ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போயிருந்தேன்!" என்றாள் மஞ்சுளா.</p><p>"யாரோட பர்த்டே பார்ட்டி?"</p><p>மஞ்சுளா சற்றுத் தயங்கி விட்டு, "சாரிடி. பிரகாஷோட பர்த்டே பார்ட்டிதான். நம்ம கிளாஸ்ல சில பேரைத்தான் அவன் கூப்பிட்டிருந்தான் போல இருக்கு. உன்னை அவன் கூப்பிட்டானா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஒருவேளை கூப்பிடலேன்னா நீ வருத்தப்படுவியேன்னுதான் பார்ட்டிக்குப் போறதைப் பத்தி உங்கிட்ட சொல்லல" என்றாள் மஞ்சுளா.</p><p>ரூபாவின் முகத்தில் ஒரு கணம் அதிர்ச்சி தெரிந்தது. பிறகு சமாளித்துக் கொண்டவளாக, "அதனால என்ன? எனக்குத் தனியா பார்ட்டி கொடுக்கலாம்னு நினைச்சிருப்பான்!" என்றாள். </p><p>மஞ்சுளா தோழியை வியப்புடன் பார்த்து விட்டுப் பேசாமல் இருந்தாள்.</p><p><span style="font-size: large;">ரூ</span>பா அன்று இரவு படுக்கச் செல்லும்போது , 'என்னை ஏன் கூப்பிடலேன்னு பிரகாஷ்கிட்ட சண்டை போடத்தான் போறேன். எனக்குத் தனியா பார்ட்டி கொடுக்கணும்னு கேக்கப் போறேன். எப்படி மாட்டேன்னு சொல்றான்னு பாக்கறேன்!' என்று நினைத்துக் கொண்டாள்.</p><p>"ஏண்டி முட்டாள்! அவன் உன்னை மதிக்கலேன்னு தெரிஞ்சப்புறம் அவன்கிட்ட பழகி அவனோட அன்பைப் பெறலாம்னு நினைக்கறியே! இது பைத்தியக்காரத்தனம் இல்லை?"</p><p>திடுக்கிட்டுக் கண் விழித்தாள் ரூபா. யார் இப்படிக் கேட்டது? </p><p>கண்களைக் கசக்கிக் கொண்டு முழு விழிப்பு நிலை வந்த பிறகுதான் தான் தூங்கிக் கொண்டிருந்தபோது அது தன் உள்ளுக்குள்ளிருந்தே எழுந்த குரல் அது என்பது அவளுக்குப் புரிந்தது.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 130</b></div><div style="text-align: center;"><b>ரூபா </b></div><div style="text-align: center;"><b>நெஞ்சொடு புலத்தல்</b><br /></div></div></div><div><b>குறள் 1292<br /></b><div><div><div>உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்</div><div>செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1293.html" target="_blank">குறள் 1293</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1291.html" target="_blank">குறள் 1291</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-37695663066068801972024-02-15T06:55:00.000-08:002024-02-15T09:06:43.421-08:001291. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJlwwLmbpb7JDl1O9lAJbrYYsXWRpxMFZwae8DBQA0Rd4XWWwlC4TZvH9WSgVGo5wqZCpeAj7rjh6UoVYwlzXkRB65Orcotx8OBMEygPjwhaGRXxNYry_-uXD6nHYsHn2QdNvXOEMwok-uKB90ZlrWR4rkH5c6-GBYWlgZ_JLNJkWvr0ZX6HHTJghVcyo/s275/1291.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" height="183" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJlwwLmbpb7JDl1O9lAJbrYYsXWRpxMFZwae8DBQA0Rd4XWWwlC4TZvH9WSgVGo5wqZCpeAj7rjh6UoVYwlzXkRB65Orcotx8OBMEygPjwhaGRXxNYry_-uXD6nHYsHn2QdNvXOEMwok-uKB90ZlrWR4rkH5c6-GBYWlgZ_JLNJkWvr0ZX6HHTJghVcyo/s1600/1291.jpg" width="275" /></a></div>இன்று மூன்றாவது நாள். <p></p><p>சவிதா பூங்காவுக்கு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்ததுதான் மிச்சம். பாலன் இன்றும் வரவில்லை. </p><p>இத்தனைக்கும் இந்த மூன்று அவன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து மாலை 6 மணிக்கு பூங்காவில் சந்திக்கலாம் என்று சொல்லி விட்டுத்தான் அவள் வந்து காத்திருந்தாள்.</p><p>முதல்நாள் காத்திருந்து ஏமாற்றமடைந்து வீட்டுக்குத் திரும்பினாள். அடுத்த நாள் பாலனிடமிருந்து ஃபோன் வரும் என்று மதியம் வரை எதிர்பாரத்துக் காத்திருந்து விட்டு பிற்பகலில் அவன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்தாள்.</p><p>"ஓ, சாரி! நேத்து ஆஃபீஸ்லேந்து கிளம்ப லேட் ஆயிடுச்சு. அதான் வர முடியல" என்றான் பாலன்.</p><p>"அது சரி. இன்னிக்குக் காலையிலேயே எனக்கு ஃபோன் செஞ்சு சொல்லி இருக்க வேண்டாமா? காலையிலேந்து உங்ககிட்டேந்து ஃபோன் வரும்னு காத்துக்கிட்டே இருந்தேன்" என்றாள்.</p><p>"சாரி. மறந்துட்டேன்" என்றான் பாலன் சாதாரணமாக. </p><p>'மறந்துட்டேன்னு எப்படி சாதாரணமா சொல்றா!' என்று மனதில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்ட சவிதா, "சரி. அப்ப இன்னிக்கு?" என்றாள்.</p><p>அலுவலகத் தொலைபேசியைப் பயன்படுத்தியதால் தான் பேசுவதை யாராவது கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்துடனேயே அவள் பேச வேண்டி இருந்தது.</p><p>"இன்னிக்கு கண்டிப்பா பாக்கலாம். அதே இடம், அதே டைம்!" என்றான் பாலன்.</p><p>ஆனால் அவன் அன்றும் வரவில்லை.</p><p>அடுத்த நாள் காலை அவனே ஃபோன் செய்து, "சாரி. நேத்திக்கு அம்மாவை டாக்டர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போறதா சொல்லி இருந்தேன். அதை மறந்து உங்கிட்ட வரதா சொல்லிட்டேன். ஆனா இன்னிக்குக் கண்டிப்பாப் பாக்கலாம்" என்று சொல்லி அவள் வேறு ஏதாவது கேட்டு விடப் போகிறாளோ என்று ஃபோனை வைத்து விட்டான்.</p><p>ஆனால் இன்றும் அவன் வரவில்லை. நாளைக்கு ஃபோன் செய்து ஏதாவது காரணம் சொல்லுவான். நாளை பார்க்கலாம் என்று சொல்லுவான். அவளும் முட்டாளைப் போல் நாளை போய்க் காத்திருப்பாள்!</p><p><span style="font-size: large;">அ</span>ன்று இரவு வீட்டுக்குப் போன பிறகும் அவன் நினைவாகவே இருந்தாள் சவிதா.</p><p>திடீரென்று அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 'நான் எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேனே, அதுபோல் அவரும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாரா?' </p><p> தூரத்திலிருந்து ஒரு பாடல் வரி காற்றில் மிதந்து வந்து அவள் காதில் கேட்டது.</p><p>'இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ?'</p><p>சவிதாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது போல் இருந்தது. </p><p>'நான் என் காதலனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் என்னைப் பற்றி நினைப்பதே இல்லை போலும்! அதனால்தான் எனக்கு இத்தனை ஏமாற்றங்கள் நிகழ்கின்றன.'</p><p>'இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ?' என்ற வரி மீண்டும் அவளைத் தாக்கியது.</p><p>'அவருக்கு என்னைப் பற்றிய எண்ணம் இல்லாதபோது நான் மட்டும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேனென்றால் அதற்குக் காரணம் என்ன?</p><p>'என் நெஞ்சுதான்!</p><p>'அவர் நெஞ்சு அவரைப் பற்றித்தான் நினைக்கிறது. ஆனால் என் நெஞ்சு என்னைப் பற்றி நினைக்காமல் அவரைப் பற்றி நினைக்கிறது! </p><p>'இந்த நிலையில் நான் அடையும் ஏமாற்றங்களுக்கு அவரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?'</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 130</b></div><div style="text-align: center;"><b>நெஞ்சொடு புலத்தல்</b><br /></div></div></div><div><b>குறள் 1291<br /></b><div><div><div>அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே</div><div>நீஎமக்கு ஆகா தது</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1292.html" target="_blank">குறள் 1292</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1290.html" target="_blank">குறள் 1290</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-78048116462187218452024-02-09T08:50:00.000-08:002024-02-15T06:57:38.873-08:001290. குறையாத கோபம்<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5KjL2piDHpuvdUBET2whc89ju0b_73etMbpg99zm6fWVQy5s-rbSf7EGwJE31UMajVFOZx1cJqVspHyogkUZ0NI5CTdEozvD9ZlzF83FuZlsoFFvZR-Je51Vn9-AeUlAEwF8mqHR-YnDkNecmbdodJcKI5TEhTC8zHU7Q-IiHMqwdRWY4-Nkf0mtmUTw/s264/1340.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="191" data-original-width="264" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5KjL2piDHpuvdUBET2whc89ju0b_73etMbpg99zm6fWVQy5s-rbSf7EGwJE31UMajVFOZx1cJqVspHyogkUZ0NI5CTdEozvD9ZlzF83FuZlsoFFvZR-Je51Vn9-AeUlAEwF8mqHR-YnDkNecmbdodJcKI5TEhTC8zHU7Q-IiHMqwdRWY4-Nkf0mtmUTw/s1600/1340.jpg" width="264" /></a></div>"இனிமே என்னைப் பாக்காதே! என்னோட பேசாதே!" என்றாள் விசித்ரா கோபத்துடன்.<p></p><p>"நான் சொல்றதைக் கேளு!" என்று மன்றாடினான் வைபவ்.</p><p>"நீ சொன்னதைக் கேட்டு நான் ஏமாந்ததெல்லாம் போதும்!"</p><p>கோபமாக வெளியேறினாள் விசித்ரா. காதலியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றான் வைபவ்.</p><p>இது நடந்து நான்கைந்து நாட்கள் கடந்து விட்டன. அவளைத் தொடர்பு கொள்ள வைபவ் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஃபோன் செய்தால் உடனே துண்டித்தாள். </p><p>மன்னிப்புக் கேட்டும், வருத்தம் தெரிவித்தும், தன் காதலைத் தெரிவித்தும் அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளும் பலனளிக்கவில்லை. </p><p>'ஜனனி' திரைப்படத்தில் வரும் 'மன்னிக்க மாட்டாயா மனமிரங்கி' என்ற பாடலின் யூடியூப் வீடியோவை அனுப்பினான். அதற்கும பலன் இல்லை.</p><p>மாலை நேரத்தில் விசித்ராவின் அப்பாவும் அம்மாவும் நடைப் பயிற்சி செய்யப் போய் விடுவார்கள் என்பதால் அப்போது விசித்ரா வீட்டில் தனியாகத்தான் இருப்பாள் என்று அவள் ஒருமுறை கூறியது அவன் நினைவுக்கு வந்தது. அதனால் மாலை 6 மணிக்கு அவள் வீட்டுக்குச் சென்றான் வைபவ்.</p><p>அழைப்பு மணியை அடித்ததும் கதவைத் திறந்த விசித்ரா அவனைப் பார்த்தும் திரும்பி உள்ளே போய் விட்டாள். நல்லவேளை அவனை வெளியே நிறக வைத்துக் கதவைச் சாத்தவில்லை!</p><p>வைபவ் முன்னறையில் போய் சோஃபாவில் அமர்ந்தான். சற்று நேரத்தில் விசித்ரா உள்ளிருந்து வந்து அவன் எதிரே உட்கார்ந்து 'எங்கே வந்தாய்?' என்பது போல் அவனைப் பார்த்தாள்.</p><p>"எங்கே?" என்றான் வைபவ்.</p><p>"என்ன எங்கே?"</p><p>"இல்லை. உள்ளே போனியே எனக்கு காப்பி போட்டு எடுத்துக்கிட்டு வரத்தானே? அதுதான் எங்கேன்னு கேட்டேன்!"</p><p>விசித்ரா சிரிக்கவில்லை. "உன் மூஞ்சில ஊத்தறதுக்காக வெந்நீர் போடத்தான் போனேன். இன்னும் கொதிக்கல. கொதிச்சதும் எடுத்துக்கிட்டு வரேன்!" என்றாள் சூடாக.</p><p>சற்று நேரம் மௌனமாக இருந்த பிறகு, "நீ இங்கே வரியா?" என்று சோஃபாவில் தன் பக்கத்தில் இருந்த இடத்தைக் காட்டினான் வைபவ்.</p><p>"வரேன். ஆனா நீ இங்கே வந்து உக்காரணும்!" என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியைக் காட்டினாள் அவள்.</p><p>இருவரும் இடம் மாற்றிக் கொண்டனர்.</p><p>சில விநாடிகள் கழித்து வைபவ் மெல்ல எழுந்து போய் சோஃபாவில் விசித்ராவின் அருகே அமர்ந்தான். அவள் எதுவும் சொல்லவில்லை.</p><p>சற்று நெருக்கமாக அவள் மேல் இடிப்பது போல் உட்கார்ந்தான். அவள் அவனைத் தள்ளவோ, தான் தள்ளி உட்காரவோ முயற்சி செய்யவில்லை. </p><p>தன் கையை சோஃபாவின் பின்புறமாக மெதுவாக எடுத்துச் சென்று விசித்ராவின் தோளின் மீது வைத்தான் வைபவ். அவள் அவன் கையை உதறித் தள்ளவில்லை.</p><p>ஆனால் அவள் முகத்தில் மட்டும் கோபம் இன்னும் குறையவில்லை என்பதை கவனித்தான் வைபவ்.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 129</b></div><div style="text-align: center;"><b>புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)</b><br /></div></div></div><div><b>குறள் 1290<br /></b><div><div><div>கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்</div><div>என்னினும் தான்விதுப் புற்று.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1291.html" target="_blank">குறள் 1291</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/12/1289.html" target="_blank">குறள் 1289</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-12158423671175946672023-12-09T18:42:00.000-08:002024-02-09T09:07:01.595-08:001289. நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்!<p></p><div class="separator" style="clear: both; text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkUf1m_AG7fBUKbkaj-DfizQE-3rpu2G6S3s02BQnRwS_YWLTtXZKO0RMPGvIfOLNEh5aFNxuyew3bcaNy1i1aTNRY6-dZId7VFBW-TugospHBogVE5CIw84LLXerFayOK6Se0vFrLLk_rxhWTGhRMFdZTnl5pD9HWQQ1bgM2SNWfTUaFPeNDIirgkaNY/s275/1289-1.jpeg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" height="183" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkUf1m_AG7fBUKbkaj-DfizQE-3rpu2G6S3s02BQnRwS_YWLTtXZKO0RMPGvIfOLNEh5aFNxuyew3bcaNy1i1aTNRY6-dZId7VFBW-TugospHBogVE5CIw84LLXerFayOK6Se0vFrLLk_rxhWTGhRMFdZTnl5pD9HWQQ1bgM2SNWfTUaFPeNDIirgkaNY/s1600/1289-1.jpeg" width="275" /></a></div>"என்னைக் காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டே? ஆனா ஏன் கல்யாணம் ஆனதிலேந்து ஒரு மாதிரியாவே இருக்க?" என்றான் கார்த்திக், மலரிடம்.</div><p></p><p>"ஒண்ணுமில்லையே!" என்றாள் மலர். அப்படிச் சொல்லும்போதே அவளிடம் ஒரு பதட்டம் தெரிந்தது.</p><p>"எனக்குத் தெரியும்!" என்ற கார்த்திக், அவள் காதருகில் குனிந்து, "முதலிரவு தள்ளிப் போய்க்கிட்டே இருக்கேன்னுதானே?" என்றான் சிரித்துக் கொண்டே.</p><p>"சீச்சீ!" என்றாள் மலர், இன்னும் அதிகப் பதட்டத்துடன்.</p><p>"இந்தப் பெரியவங்க இப்படித்தான். நாள் நட்சத்திரம்னு பார்த்து நாம ஒண்ணு சேரறதைத் தள்ளிப் போட்டுக்கிட்டே இருப்பாங்க. அதான் இப்ப தேதி குறிச்சுட்டாங்களே! இன்னும் ரெண்டு நாள்தானே இருக்கு!" என்றான் கார்த்திக்.</p><p><span style="font-size: large;">"போ</span>ன வாரம் முழுக்க டல்லா இருந்த. இப்ப முதல் இரவு முடிஞ்சப்புறம் நாலு நாளா எவ்வளவு உற்சாகமா இருக்க! நான் சொன்னபடி முதல் இரவு தள்ளிப் போகுதேங்கற கவலையினாலதானே முதல்ல டல்லா இருந்தே?" என்றான் கார்த்திக்.</p><p>மலர் பதில் சொல்லவில்லை.</p><p>சமீபத்தில்தான் திருமணமாகி இருந்த அவள் தோழி வாணி அவள் கணவன் முதல் இரவின்போது அவளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதையும் அதற்குப் பிறகும் அவளுடைய உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து அவ்வாறே நடந்து கொள்வதாகவும், ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று வருந்துவதாகவும் மலரிடம் சொல்லி இருந்தாள்.</p><p>அத்துடன், "என்னோட தோழிகள் சில பேருக்கும் இதே அனுபவம்தான். எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான் இருப்பாங்க போலருக்கு!" என்று வாணி கூறியதால், தன் கணவனும் அப்படி இருப்பானோ என்ற பதட்டத்தில் தான் இருந்ததையும், கார்த்திக்கின் மென்மையான அணுகுமுறையால் அந்தப் பதட்டம் நீங்கி உற்சாகமாக இருப்பதையும் மலர் கார்த்திக்கிடம் கூறவில்லை."</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 129</b></div><div style="text-align: center;"><b>புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)</b><br /></div></div></div><div><b>குறள் 1288<br /></b><div><div><div><div>மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்</div><div>செவ்வி தலைப்படு வார்.</div></div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2024/02/1290.html" target="_blank">குறள் 1290</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/12/1288.html" target="_blank">குறள் 128</a>8</b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-22361074981193336572023-12-09T07:01:00.000-08:002023-12-09T18:44:49.443-08:001288. மன்னிக்க முடியாதுதான், ஆயினும்...<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7_c9wCW7iv2DHT8iTMRrEIslbFhFhW_7qBqIw98GoTcYVechOLWoJuR-kMlTX4pX9WEQ7TaekjBAUq95LzohgF5basMgANWMcBod103kBW94HFcYGLv3HR-ctpW6NCo3QpdX7GBZsX-x59kGHZeDw54HJDWglO3OnaSpYw1iUDyPEsQZ54s2FYb97tMc/s262/1288-1.jpeg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="192" data-original-width="262" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7_c9wCW7iv2DHT8iTMRrEIslbFhFhW_7qBqIw98GoTcYVechOLWoJuR-kMlTX4pX9WEQ7TaekjBAUq95LzohgF5basMgANWMcBod103kBW94HFcYGLv3HR-ctpW6NCo3QpdX7GBZsX-x59kGHZeDw54HJDWglO3OnaSpYw1iUDyPEsQZ54s2FYb97tMc/s1600/1288-1.jpeg" width="262" /></a></div> அஸ்வின் அப்படிச் செய்வான் என்று அனுபமா எதிர்பார்க்கவில்லை.<p></p><p></p><p>அஸ்வினும் அனுபமாவும் காதலர்கள் என்பது அனுபமாவின் தோழிகளுக்குத் தெரியும்.</p><p>அப்படி இருக்கும்போது அனுபமாவை அவள் தோழிகள் முன்னிலையில் அஸ்வின் கேலி செய்தது அனுபமாவை அதிர்ச்சி அடையச் செய்தது.</p><p>அனுபமா கிராமத்துப் பெண்ணாம். அவளுக்கு நாகரீகமான பழக்கங்கள் கிடையாதாம். ஓட்டலில் ஸ்பூனால் சாப்பிடும்போது தன் உடைகளில் சிந்திக் கொள்வாளாம். ஸ்பூனால் சாப்பிடத் தெரியாதவள் கையால் சாப்பிட வேண்டியதுதானே, ஏன் ஸ்பூனால் சாப்பிட முயற்சி செய்து தன் உடைகளைப் பாழாக்கிக் கொள்ள வேண்டும்? கல்யாணத்துக்குப் பிறகு துணிகளி கறைகளைப் போக்கும் சோப்புத் தூள் வாங்கவே அவன் சம்பளத்தில் பாதி போய் விடுமாம்.</p><p>அஸ்வின் பேசியதைக் கேட்கக் கேட்க அனுபமாவின் அவமான உணர்வு பீறிட்டு வந்தது. அஸ்வின் பேச்சைக் கேட்டுத் தோழிகள் சிரித்தது அவள் அவமான உணர்வை இன்னும் அதிகமாக்கியது.</p><p>விருட்டென்று அங்கிருந்து வெளியேறி விட்டாள் அனுபமா. தான் அதிகமாகப் பேசி விட்டோமோ என்று நினைத்து அஸ்வின், "சாரி! சும்மா விளையாட்டுக்காகத்தான் சொன்னேன்" என்று கூறியதைக் கூட அனுபமா காதில் போட்டுக் கொள்ளவில்லை.</p><p><span style="font-size: large;">ப</span>த்து நாட்களுக்குப் பிறகு தனிமையில் அஸ்வினின் மார்பில் தன் தலையைச் சாய்த்தபடி நின்றிருந்தாள் அனுபமா.</p><p>"நல்லவேளை! அன்னிக்கு நீ கோவிச்சுக்கிட்டுப் போனதைப் பாத்தா நீ எங்கிட்ட திரும்பி வர மாட்டியோன்னு பயந்துட்டேன்!" என்றான் அஸ்வின், அவள் தலைமுடியைக் கோதியபடி.</p><p>'நீ அப்படிப் பேசினதை என்னால மன்னிக்கவே முடியாது.ஆனாலும் என்ன செய்யறது? உன் மார்பில என் தலையை சாய்ச்சுக்கிட்டு இருக்கறப்ப கிடைக்கிற சுகத்தை என்னால மறக்க முடியலியே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் அனுபமா. </p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 129</b></div><div style="text-align: center;"><b>புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)</b><br /></div></div></div><div><b>குறள் 1288<br /></b><div><div><div>இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்</div><div>கள்ளற்றே கள்வநின் மார்பு.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/12/1289.html" target="_blank">குறள் 1289</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/12/1287.html" target="_blank">குறள் 1287</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-24884664948534237242023-12-09T02:48:00.000-08:002023-12-09T07:02:09.701-08:001287. எத்தனை நாள் ஆயிற்று?<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjASQ-E_DrgEaKTuHN1Z69Iusu-Z3wwLn80QxFXrAW7eoYOzPdfbU4L7EuMzmU0RGspbatPwOcO6qKS9oEmN_u8DeiUiKTQ6jVQiIpkVZnhQ4590BjFeSrxeruLWhC_LhJfoWein68rcC9ELojaT1wiFQqe2JMQcZhX8zaL_i6PH7pnQLNMSrd5k7ko4cA/s262/1287-1.jpeg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="192" data-original-width="262" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjASQ-E_DrgEaKTuHN1Z69Iusu-Z3wwLn80QxFXrAW7eoYOzPdfbU4L7EuMzmU0RGspbatPwOcO6qKS9oEmN_u8DeiUiKTQ6jVQiIpkVZnhQ4590BjFeSrxeruLWhC_LhJfoWein68rcC9ELojaT1wiFQqe2JMQcZhX8zaL_i6PH7pnQLNMSrd5k7ko4cA/s1600/1287-1.jpeg" width="262" /></a></div> "எத்தனை நாள் ஆச்சு?" என்றாள் லதா.<p></p><p></p><p>"எது எத்தனை நாள் ஆச்சு?" என்றாள் மாலினி.</p><p>"நான் அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு வந்து?"</p><p>"ஏண்டி, இதையெல்லாம் நான் கணக்கு வச்சுக்கணுமா? சண்டை போட்டுக்கிட்டு வந்த உனக்குத் தெரியாது?"</p><p>"அதுக்குப் பேர் சண்டை இல்ல. ஒரு பிணக்கு. அவ்வளவுதான்."</p><p>"அன்னிக்கு நீதான் சொன்னே, சண்டை போட்டுக்கிட்டு வந்துட்டேனு!"</p><p>"சரி. கோவத்தில சொல்லி இருப்பேன். என்னிக்கு அது?"</p><p>"முந்தா நாள்."</p><p>"முந்தா நாளா? அஞ்சாறு நாள் ஆயிருக்கும்னு நெனச்சேன்!"</p><p>"நெனப்ப! அது சரி. எதுக்கு இந்த நாள் கணக்கு இப்ப?"</p><p>"இன்னிக்கு சனிக்கிழமை. அவர் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போவாரு. அங்க போய் அவரைப் பாத்துப் பேசலாம் பாக்கறேன்!"</p><p>"ஏண்டி, அன்னிக்கு என்னமோ அவரா வந்து உங்கிட்ட பேசினாதான் அவரோட பேசுவேன்னு வீராப்பா பேசின. இப்ப நீயே வலுவில போய்ப் பேசறேன்னு சொல்ற!"</p><p>"காதல்ல கௌரவம் பாக்கக் கூடாது!"</p><p>"இந்தத் தத்துவம் எல்லாம் வேண்டாம். சண்டை போட்டுட்ட. ஆனா அவரைப் பிரிஞ்சு ரெண்டு நாள் கூட இருக்க முடியல. உன்னால அவரைப் பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன் அவரோட சண்டை போட்ட?" என்றாள் மாலினி.</p><p>தோழியின் கேள்விக்கு லதாவிடம் பதில் இல்லை.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 129</b></div><div style="text-align: center;"><b>புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)</b><br /></div></div></div><div><b>குறள் 1287<br /></b><div><div><div>உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்</div><div>பொய்த்தல் அறிந்தென் புலந்து.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/12/1288.html" target="_blank">குறள் 1288</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/12/1286.html" target="_blank">குறள் 1286</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-41936315336639184172023-12-07T19:28:00.000-08:002023-12-09T02:52:34.404-08:001286. குறை ஒன்று இல்லை (பல உண்டு!)<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG7bVGFkt-QntCL8a9EGExo8V3U66eJ3TOZy67zQIPWrmDzVoF69R3E7C1eIq3ihSMeURkno05S3D-vTwBdwGA4ZMbehPjVeSADOy8ycs9YCZYEb86JtUItExKWpLH7z7tqM28zLJHWQH2HBCXrcFMgTPcYkREgKhTltBtQLuzpWmxA-spDiNpL4zjbBA/s265/1287.jpeg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="190" data-original-width="265" height="190" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG7bVGFkt-QntCL8a9EGExo8V3U66eJ3TOZy67zQIPWrmDzVoF69R3E7C1eIq3ihSMeURkno05S3D-vTwBdwGA4ZMbehPjVeSADOy8ycs9YCZYEb86JtUItExKWpLH7z7tqM28zLJHWQH2HBCXrcFMgTPcYkREgKhTltBtQLuzpWmxA-spDiNpL4zjbBA/s1600/1287.jpeg" width="265" /></a></div>"என்கிட்ட உனக்குப் பிடிச்சது என்னென்ன சொல்லு பாக்கலாம்!" என்றான் கோவிந்த்.<p></p><p>"உங்கிட்ட எனக்கு எல்லாமே பிடிக்கும். எதைன்னு சொல்றது?" என்றாள் சுகன்யா.</p><p>"பொதுவாச் சொன்னா எப்படி? குறிப்பா சிலதையாவது சொல்லு."</p><p>"நீ நல்லா டிரஸ் பண்ணிக்கிற. இனிமையாப் பேசற. கோபப்படறதே இல்லை. சிகரெட், குடி மாதிரி கெட்ட பழக்கங்கள் இல்லை. உன் அம்மா மேல ரொம்ப அன்பு வச்சிருக்க."</p><p>"அடேயப்பா! எங்கிட்ட இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கறது எனக்கே தெரியாதே!" என்றான் கோவிந்த் சிரித்தபடி.</p><p><span style="font-size: large;">"ஏ</span>ண்டி, தினம் உன் காதலனைச் சந்திச்சுட்டு வந்தப்புறம் ஏதாவது புலம்பிக்கிட்டே இருக்கே?" என்றாள் நளினி.</p><p>"அவன்கிட்ட இருக்கற குறைகளை யார்கிட்டயாவது சொல்லணும் போல இருக்கு. என்னோட நெருங்கிய தோழியான உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவேன்?"</p><p>"எல்லார்கிட்டேயும் ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்யும்."</p><p>"ஆனா அவன்கிட்ட நிறையக் குறைகள் இருக்கு."</p><p>"அப்படி என்ன குறைகள்?"</p><p>"சில சமயம் என்னைப் பாக்க வரேன்னு சொல்லிட்டு வரதில்ல. கேட்டா ஏதாவது பொய்யான காரணம் சொல்றான். அவன் படிப்புக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்கும். ஆனா இப்ப இருக்கற வேலையே திருப்தியா இருக்குன்னு சொல்றான். முன்னேறணுங்கற ஆசை வேண்டாம்? அப்புறம், எப்பவும் தன்னோட அம்மாவைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கா. என் மேல அக்கறை காட்டறதில்ல. நான் புதுசா ஒரு டிரஸ் போட்டுக்கிட்டு வந்தா அதைக் கூட கவனிக்கிறதில்ல. அப்புறம்..."</p><p>"சரி. இதையெல்லாம் அவன்கிட்டயே கேட்டுட வேண்டியதுதானே?"</p><p>"என்னவோ தெரியலடி. அவனோட இருக்கறப்ப இதெல்லாம் எதுவுமே என் ஞாபகத்துக்கு வரதில்ல" என்றாள் சுகன்யா, சற்றே கூச்சத்துடன்.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 129</b></div><div style="text-align: center;"><b>புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)</b><br /></div></div></div><div><b>குறள் 1286<br /></b><div><div><div>காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்</div><div>காணேன் தவறல் லவை.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>அவரைக் காணும்போது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபோது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/12/1287.html" target="_blank">குறள் 1287</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/12/1285.html" target="_blank">குறள் 1285</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-83774132231362409592023-12-03T00:35:00.000-08:002023-12-07T19:29:03.279-08:001285. குற்றப் பத்திரிகை!<p></p><div class="separator" style="clear: both; text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBzN-FWF5ca8JKDXacts3UCm4n2pMn6OEKxeqXh3qeiXNG8f2e5lxn2sFA4mgswbQB7uE73x1buwkHNdrTA73oGhAkHIGne7n61IK7byXlo_iYfuFzsqDHIJ12KE0pDwKl7NUBIcfetCxq1_TIgLB2g5r1X5J1XVSzhEORBRo9QRaC-Iv3h6bVL9iU1J8/s275/download.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" height="183" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBzN-FWF5ca8JKDXacts3UCm4n2pMn6OEKxeqXh3qeiXNG8f2e5lxn2sFA4mgswbQB7uE73x1buwkHNdrTA73oGhAkHIGne7n61IK7byXlo_iYfuFzsqDHIJ12KE0pDwKl7NUBIcfetCxq1_TIgLB2g5r1X5J1XVSzhEORBRo9QRaC-Iv3h6bVL9iU1J8/s1600/download.jpg" width="275" /></a></div>கிருத்திகா மேஜை மீது ஒரு தாளை வைத்து மும்முரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தபோது, பின்னால் யாரோ நின்று கொண்டு பார்ப்பதாக உணர்ந்து ஒரு கையால் தான் எழுதியதை மூடிக் கொண்டு திரும்பிப் பார்த்தாள்.</div><p></p><p>பின்னால் நின்று கொண்டிருந்த அவள் தோழி கனகா சிரித்துக் கொண்டே, "நீ எழுதிக்கிட்டிருந்த காதல் கடிதத்தைப் பார்த்துட்டேன்" என்றாள்.</p><p>"இது காதல் கடிதம் இல்லை. அதனால நீ பார்த்ததா சொன்னது பொய்! எங்கே பாத்திருப்பியோன்னு நினைச்சேன், நல்லவேளை நீ பாக்கல."</p><p>"சரிடி. நான் பொய்தான் சொன்னேன். நீதான் நான் பாக்கறதுக்குள்ள மூடிட்டியே! சரி, சொல்லு. என்ன அது?"</p><p>"அது ஒரு லிஸ்ட்!" என்றாள் கிருத்திகா.</p><p>"லிஸ்டா? என்ன லிஸ்ட்? மளிகை சாமான் லிஸ்டா? அப்படி இருந்தா அதை மறைச்சிருக்க மாட்டியே!"</p><p>"சுதாகர்கிட்ட எனக்கு நிறையக் குற்றம் குறைகள் இருக்கு. இன்னிக்கு சாயந்திரம் அவரைச் சந்திக்கறப்ப இதையெல்லாம் அவர்கிட்ட சொல்லப் போறேன். ஞாபகமா எல்லாத்தையும் சொல்லணுங்கறதுக்காகத்தான் எல்லாத்தையும் எழுதி வைக்கறேன்."</p><p>"ஓ, குற்றப் பத்திரிகையா? என்னென்ன குற்றம்? ஒண்ணு ரெண்டு சொல்லேன்!"</p><p>"அதெல்லாம் நான் அவர்கிட்ட எதிர்பார்த்து அவர் செய்யாத விஷயங்கள். அதையெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாது" என்றாள் கிருத்திகா.</p><p><span style="font-size: large;">மா</span>லையில் சுதாகரைச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேசி விட்டு வீட்டுக்குத் திரும்பும்போதுதான், காலையில் தான் எழுதி வைத்திருந்த பட்டியலிலிருந்து ஒரு குறையைக் கூட அவனிடம் சொல்லவில்லை என்பது கிருத்திகாவுக்கு நினைவு வந்தது.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்றை</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 129</b></div><div style="text-align: center;"><b>புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)</b><br /></div></div></div><div><b>குறள் 1285<br /></b><div><div><div>எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்</div><div>பழிகாணேன் கண்ட இடத்து.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>மை தீட்டும் நேரத்தில் தீட்டு்கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/12/1286.html" target="_blank">குறள் 1286</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/11/1284.html" target="_blank">குறள் 1284</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-31662428932782023172023-11-30T00:04:00.000-08:002023-12-03T00:42:14.110-08:001284. கமலியின் கோபம்!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_G-mVpmOCwkGuNphNgP5f3Hz4Iq9cifelYmZCFqOog7CO-Z4GRmscohtdeyARz3fTOdC1OAuSY6lYYaTgWpS4gsZ_PvkdU76F8fORotR7eaIqyH2CoJa8DxgjZ-WR189Jue-HJNuWfA-loIOfVVDpuFeiEuNPrjQaD85IgWS6szAr_DbrNoMXXdYBt6g/s262/images.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="192" data-original-width="262" height="192" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_G-mVpmOCwkGuNphNgP5f3Hz4Iq9cifelYmZCFqOog7CO-Z4GRmscohtdeyARz3fTOdC1OAuSY6lYYaTgWpS4gsZ_PvkdU76F8fORotR7eaIqyH2CoJa8DxgjZ-WR189Jue-HJNuWfA-loIOfVVDpuFeiEuNPrjQaD85IgWS6szAr_DbrNoMXXdYBt6g/s1600/images.jpg" width="262" /></a></div>"உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறேன். எனக்கு என்ன தருவ?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் ராதிகா.<p></p><p>"நான் என்ன ராஜாவா என்ன, நீ நல்ல செய்தி சொன்னா உனக்குப் பரிசு கொடுக்க? அதோட இப்ப எனக்கு எந்த செய்தியும் நல்ல செய்தியா இருக்காதுடி!" என்றாள் கமலி.</p><p>"உன் காதலர் திரும்பி வந்துடார்னு சொன்னா, அது கூட நல்ல செய்தி இல்லையா?"</p><p>"என்னடி சொல்ற?" என்றாள் கமலி வியப்புடனும், மகிழ்ச்சியுடனும்.</p><p>"ஆமாண்டி. பிரகாஷ் வந்துட்டாரு. இன்னிக்குக் காலையிலதான் வந்தாராம். தற்செயலா அவர் வீட்டுப் பக்கமா நான் போய்க்கிட்டிருந்தப்ப என்னைப் பார்த்துட்டு உங்கிட்ட இதைச் சொல்லச் சொன்னாரு. இன்னிக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு நீங்க வழக்கமா சந்திக்கிற இடத்துக்கு உன்னை வரச் சொன்னாரு. அது என்னடி வழக்கமாச் சந்திக்கிற இடம்?" என்றாள் ராதிகா கேலியுடன்.</p><p>கமலி அவளுக்கு பதில் சொல்லாமல் மனதுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள்.</p><p>"என்னடி பதில் சொல்ல மாட்டேங்கற?"</p><p>"ஆஃபீஸ் வேலையா கல்கத்தாவுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போய் ரெண்டு மாசம் ஆச்சு. அதுக்கப்புறம் எனக்கு ஒரு தகவலும் இல்லை. இப்ப அவரைச் சந்திக்கச் சொல்லி உங்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறாரு. என்னை என்ன கிள்ளுக் கீரைன்னு நினைச்சுக்கிட்டிருக்காரா?"</p><p>"ஏண்டி, உன் வீட்டில என்ன ஃபோனா இருக்கு, தினம் உங்கிட்ட ஃபோன் பண்ணிப் பேசறதுக்கு? இன்னிக்குக் காலையிலதான் ஊர்லேந்து வந்திருக்காரு. என்னைப் பார்த்ததால எங்கிட்ட தவல் சொல்லி அனுப்பினாரு. இதில என்ன தப்பு?"</p><p>"ஃபோன் இல்லாட்டா என்ன? கல்கத்தாவில போஸ்ட் ஆஃபீஸ் இல்லையா என்ன? எனக்கு ஒரு கார்டு கூட எழுதலையே அவரு! சரி, ஊருக்கு வந்தவர் நேரா என்னைப் பாக்க வந்திருக்க வேண்டாம்? அது என்ன உங்கிட்ட தகவல் சொல்லி அனுப்பறது?" என்று குமுறினாள் கமலி.</p><p>"அப்ப சாயந்திரம் அவரைப் பாக்கப் போகப் போறதில்லையா நீ?"</p><p>"போவேன். கண்டிப்பா போவேன். போய் நல்லா சண்டை போட்டுட்டு வரப் போறேன்!"</p><p><span style="font-size: large;">வ</span>ழக்கமாக பிரகாஷைச் சந்தித்துப் பேசும் பூங்காவுக்குச் சென்றாள் கமலி. அவர்கள் எப்போதும் அமரும் பெஞ்ச்சில் பிரகாஷ் அமர்ந்திருந்தான். அவன் அருகில் சென்று அமர்ந்தாள் கமலி. </p><p>பிரகாஷ் அவள் தோள்களை அணைத்துக் கொள்ள, கமலி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். </p><p>"இது மாதிரி உங்க தோள்ள சாஞ்சு எவ்வளவு நாளாச்சு!" </p><p>இது போல் அவன் தோளில் சாய்ந்து கொண்டே விடிய விடிய அங்கேயே அமர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோது, 'சண்டை போட்டாயா?' என்று நாளை தோழி கேட்டால் அவளிடம் என்ன சொல்வது என்று சங்கடத்துடன் நினைத்துப் பார்த்தாள் கமலி.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 129</b></div><div style="text-align: center;"><b>புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)</b><br /></div></div></div><div><b>குறள் 1284<br /></b><div><div><div>ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து</div><div>கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/12/1285.html" target="_blank">குறள் 1285</a><br /><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/11/1283.html" target="_blank">குறள் 1283</a></b></div><div style="text-align: center;"><br /></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-24653865306997852962023-11-28T21:59:00.000-08:002023-11-30T02:47:43.242-08:001283. எப்போ வருவாரோ!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU5-u6d-0xQFelxvnPKJ_l0p7BBty55hcVvKsgdH6fwHlisSjSHtNYgTWxHjxQ5vMt92G5gmysjvaJ9eTyBZQB-6ATCrdo5n2HVgbQhazqjYmvpimyu-sDILygGRCq-Bge474inMaX2gDJHoLDcC_HIXVX_B88yhGq-wE5gp_BkW4jcI3ymeWqGwwpEUg/s285/images.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="285" data-original-width="177" height="285" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU5-u6d-0xQFelxvnPKJ_l0p7BBty55hcVvKsgdH6fwHlisSjSHtNYgTWxHjxQ5vMt92G5gmysjvaJ9eTyBZQB-6ATCrdo5n2HVgbQhazqjYmvpimyu-sDILygGRCq-Bge474inMaX2gDJHoLDcC_HIXVX_B88yhGq-wE5gp_BkW4jcI3ymeWqGwwpEUg/s1600/images.jpg" width="177" /></a></div>என்ன காரணமென்று தெரியவில்லை, சில நாட்களாக அரவிந்தனின் போக்கில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது.<p></p><p>முன்பெல்லாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடனேயே ஓடி வந்து சுகுணாவை அணைத்துக் கொள்வான். அதன் பிறகு தூங்கப் போகும் வரை அவளுடன் பேசிக் கொண்டிருப்பான். அவள் சமையல் செய்து கொண்டிருக்கும்போது கூட அங்கே போய் அவளுடன் பேசிக் கொண்டிருப்பான்.</p><p>ஒருமுறை அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த சுகுணாவின் தாய் பார்வதி, "என்னடி பூனைக்குட்டி காலைச் சுத்திச் சுத்தி வர மாதிரி உன் புருஷன் உன்னையே சுத்திக்கிட்டிருக்காரு!" என்று கேலி செய்தாள், தன் மகளிடம் அவள் கணவன் இவ்வளவு அன்பாக இருக்கிறானே என்று மனதுக்குள் பெருமிதம் அடைந்தபடி.</p><p>ஆனால் அவையெல்லாம் இப்போது மாறி விட்டன.</p><p>இப்போதெல்லாம் அரவிந்தன் அலுவலகத்திலிருந்து வந்ததும் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறான். சுகுணா காப்பி எடுத்துக் கொண்டு வந்தால் "வச்சுட்டுப் போ!" என்கிறான். சில சமயம், "வேண்டாம். நான் வரும்போதே ஹோட்டல்ல குடிச்சுட்டேன்" என்கிறான்.</p><p>"முன்னாடியே சொல்லி இருந்தா நான் காப்பி கலந்திருக்க மாட்டேன் இல்ல?" என்று அவள் ஒருமுறை கேட்டபோது, "அப்படியெல்லாம் செய்ய முடியாது" என்று எரிந்து விழுந்தான், ஏதோ இயலாத ஒன்றைச் செய்யும்படி அவள் சொல்லி விட்டது போல்.</p><p>முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் சுகுணாவை வெளியே எங்காவது அழைத்துச் சென்றது போல் இப்போது அழைத்துச் செல்வதில்லை. அவளே, "வெளியில எங்கேயாவது போகலாமா?" என்று கேட்டால் கூட, "எனக்கு வேற வேலை இருக்கு" என்று தட்டிக் கழித்து விடுகிறான். </p><p>அவன் மட்டும் தனியே எங்காவது போய்விட்டு வருகிறான். எங்கே போகிறான், எப்போது வருவான் என்றெல்லாம் சொல்வதில்லை.</p><p>"எங்கே போறீங்கன்னு எங்கிட்ட சொல்லிட்டுப் போகஅ் கூடாதா?" என்று சுகுணா ஒருமுறை கேட்டபோது, "எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க முடியாது" என்றான்.</p><p><span style="font-size: large;">"ஆ்</span>பீஸ் வேலையா வெளியூர் போறேன். வரதுக்கு ரெண்டு நாள் ஆகும்" என்றான் அரவிந்தன்.</p><p>அரவிந்தன் இல்லாத இரண்டு நாட்களில் சுகுணாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எதையோ இழந்து விட்டது போல் உணர்ந்தாள். கணவன் எப்போது திரும்பி வருவான், எப்போது அவன் முகத்தை மீண்டும் பார்ப்போம் என்ற ஏக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.</p><p>மூன்றாம் நாள் காலையிலிருந்தே வாசற்படியில் அமர்ந்து கொண்டு அரவிந்தன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.</p><p>'எனக்கு என்ன ஆச்சு? ரெண்டு நாள் கூட என்னால அவரைப் பிரிஞ்சு இருக்க முடியலியே! அவர் என்னைக் கண்டுக்கறதில்ல. எங்கிட்ட பேசறது கூட இல்ல. அவர் இஷ்டத்துக்கு எங்கேயாவது போறாரு, வராரு. வீட்டில இருக்கறப்பவும் என்னை ஒரு பொருட்டா மதிக்கறதில்ல. அவருக்கு வேற ஒரு பொண்ணோட தொடர்பு ஏற்பட்டிருக்குமோ, அதனாலதான் இப்படி நடந்துக்கறாரோங்கற சந்தேகம் கூட எனக்கு வருது. ஆனா அவரைப் பாக்காம இருக்கறது எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு?'</p><p>சுகுணாவுக்குப் புரியவில்லை. </p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 129</b></div><div style="text-align: center;"><b>புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)</b><br /></div></div></div><div><b>குறள் 1283<br /></b><div><div><div>பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்</div><div>காணா தமையல கண்.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div></div></div><div>என் கணவன் என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.</div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/11/1284.html" target="_blank">குறள் 1284</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/11/1282.html" target="_blank">குறள் 1282</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-85396220209305586592023-11-27T03:11:00.000-08:002023-11-28T22:11:15.356-08:001282. தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால்...<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQoBO4vxeasiQjMwJ97nCCNqzYocPS6441eSLvSXGoXSwKKy9iM3X95hDQk5niMRpwxm1XXXQI_Loa_AHnuanie4L3O5-TCuKtp1a26S20EtgSfspyJqDC5cu4-rqGjMk6bcekRo79kvG4GDVyZxZS3mlpE5RZM00egub7TFpiV-0tlbbZxB5cvO_mY_4/s264/download.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="191" data-original-width="264" height="191" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQoBO4vxeasiQjMwJ97nCCNqzYocPS6441eSLvSXGoXSwKKy9iM3X95hDQk5niMRpwxm1XXXQI_Loa_AHnuanie4L3O5-TCuKtp1a26S20EtgSfspyJqDC5cu4-rqGjMk6bcekRo79kvG4GDVyZxZS3mlpE5RZM00egub7TFpiV-0tlbbZxB5cvO_mY_4/s1600/download.jpg" width="264" /></a></div>"என்னை ஒரு இடத்துக்கு வரச் சொல்றது. நான் அங்கே போய் அவருக்காகக் காத்துக்கிட்டிருந்தா, ஃபோன் பண்ணி, 'சாரி டியர், ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங், சொந்தக்காரர் ஒத்தரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போகணும், அம்மா என்னை இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொன்னாங்க' மாதிரி ஒரு காரணத்தைச் சொல்லி வராம என்னை ஏமாத்தறது! இது மாதிரி நாலைஞ்சு தடவை ஆயிடுச்சு. இதைப் பத்தி இன்னிக்கு அவர்கிட்ட ரெண்டுல ஒண்ணு கேட்டுடப் போறேன்!" என்றாள் ஸ்வப்னா, தன் தோழி கல்பனாவிடம்.<p></p><p>"நல்லாக் கேட்டுடுடி. தட்டிக் கேக்கலைன்னா ஆம்பளைங்க இப்படித்தான் நம்மை அலைக்கழிப்பாங்க!" என்றாள் கல்பனா.</p><p>"நீ சொல்றதைப் பார்த்தா, உனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும் போலருக்கே!"</p><p>"சேச்சே! உன்னை மாதிரி தோழிகள் சொல்றதை வச்சு சொல்றேன். எனக்குத்தான் காதலனே கிடையாதே! நான் இந்தக் காதல்ல எல்லாம் மாட்டிக்க மாட்டேன்."</p><p><span style="font-size: large;">"எ</span>ன்னடி, உன் காதலர்கிட்ட கேக்கப் போறேன்னியே, கேட்டியா?" என்றாள் கல்பனா.</p><p>"இல்லைடி. கேக்கணும்னு நினைச்சுத்தான் போனேன். ஆனா முடியல" என்றாள் ஸ்வப்னா.</p><p>"ஏன்?"</p><p>"ஏன்னா, எனக்கு அவர் மேல அவ்வளவு காதல் இருக்கு!"</p><p>"அதுக்காக? தட்டிக் கேக்கக் கூடாதா என்ன?"</p><p>"கேக்கலாம். ஆனா. இதனால எங்களுக்குள்ள சண்டை வந்துட்டா?"</p><p>"என்ன சண்டை வரப் போகுது? வந்தாலும் சின்னச் சண்டையாதானே இருக்கும்!"</p><p>"அதேதான்! எனக்கு அவர் மேல இவ்வளவு காதல் இருக்கறப்ப, அது ஒரு சின்னச் சண்டையால பாதிக்கப்படக் கூடாது இல்ல, நிறைய காத்து உள்ள பலூன் ஒரு சின்னக் குண்டூசி முனை பட்டு வெடிச்சுப் போற மாதிரி? அதனாலதான் கேக்க வேண்டாம்னு விட்டுட்டேன்."</p><p>கல்பனா தோழியை வியப்புடன் பார்க்க, "இதெல்லாம் உனக்குப் புரியாது. உனக்குத்தான் காதலன் இல்லையே!" என்றாள் ஸ்வப்னா சிரித்தபடி.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 129</b></div><div style="text-align: center;"><b>புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)</b><br /></div></div></div><div><b>குறள் 1282<br /></b><div><div><div>தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்</div><div>காமம் நிறைய வரின்.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>பனையளவாகக் காதல் பெருகிடும்போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்..</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/11/1283.html" target="_blank">குறள் 1283</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/11/1281.html" target="_blank">குறள் 1281</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-39682051224373905332023-11-24T22:47:00.000-08:002023-11-27T03:16:39.847-08:001281. மது உண்டால் போதையைக் கொடுக்கும்.<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUxex4BX-q4UikHZVjGJ8jOiwo8B3-q_ZWAQoT-Dptk_8bk1OE_EyUQ1prIfJSB5uaajrWAx8L6hHd42ulvi5NagBA4yovoXV9kkDYtAYEQaYQpMhUiAIfgnMgMLoU8ZcGSpg6Srlwu1bh5wP5I2BZfBGt3aVupwcaYa_1avbO42duhjBIAfKsOBH7bWw/s275/download.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="183" data-original-width="275" height="183" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUxex4BX-q4UikHZVjGJ8jOiwo8B3-q_ZWAQoT-Dptk_8bk1OE_EyUQ1prIfJSB5uaajrWAx8L6hHd42ulvi5NagBA4yovoXV9kkDYtAYEQaYQpMhUiAIfgnMgMLoU8ZcGSpg6Srlwu1bh5wP5I2BZfBGt3aVupwcaYa_1avbO42duhjBIAfKsOBH7bWw/s1600/download.jpg" width="275" /></a></div>மரகதம் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டாள். கோபமாகப் பேசுவது முதல் காலில் விழாத குறையாகக் கெஞ்சுவது வரை எல்லா விதங்களிலும் முயற்சி செய்து பார்த்து விட்டாள்.<p></p><p>ஆனால் அவள் மகன் மனோகரனால் குடிப் பழக்கத்தை விட முடியவில்லை.</p><p>ஒரு கட்டத்தில் தன் மகன் இனித் திருந்த மாட்டான் என்ற முடிவுக்கு வந்து தன் முயற்சிகளைக் கைவிட்டு விட்டாள் மரகதம்.</p><p><span style="font-size: large;">சி</span>ல நாட்ளாக மனோகரனிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அது என்ன மாற்றம் என்று புரியவே மகதத்துக்கு இரண்டு நாட்கள் ஆயின.</p><p>"என்னடா, இப்பல்லாம் நீ குடிக்கறது இல்ல போலருக்கே!" என்றாள் மரகதம் வியப்புடன்.</p><p>"ஆமாம்மா. குடியை விட்டுட்டேன்."</p><p>"எப்படிடா?" என்றாள் மரகதம் நம்ப முடியாமல்.</p><p>"நீ ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருக்க இல்ல? அதனாலதான்!"</p><p>"அப்படியெல்லாம் குடியை சட்டுனு விட முடியாதே!"</p><p>"இல்லம்மா. குடியைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டா விட்டுட லாம்."</p><p>"என்ன புரிஞ்சுக்கிட்ட? எப்படி விட்ட? என்னவோ எனக்குப் புரியல. நீ நிரந்தரமாக் குடியை விட்டுட்டா எனக்கு சந்தோஷம்தான்!"</p><p>"நிரந்தமரமாத்தான் அம்மா" என்றான் மனோகரன்.</p><p><span style="font-size: large;">"ஏ</span>ண்டா உங்கம்மா எவ்வளவோ சொல்லியும் குடியை விடாதவன் காதலிக்க ஆரம்பிச்சவுடனே விட்டுட்டியா? அம்மா சொன்னா கேக்காதவன் காதலி சொன்னதும் உடனே விட்டுட்டியே!" என்றான் மனோகரனின் நண்பன் பிரகாஷ்.</p><p>"என் காதலி எதுவும் சொல்லல. நானாத்தான் விட்டேன்!" என்றான் மனோகரன்.</p><p>"அது எப்படி நீயா விடுவ?"</p><p>"டேய்! என் காதலியைப் பாத்தாலே எனக்கு சந்தோஷம் கிடைக்குது. ஏன், அவளை நினைச்சாலே சந்தோஷம் கிடைக்குது. ஆனா மதுவுக்கு இந்த குணம் இல்லையே! மதுவைக் குடிச்சாத்தானே போதை கிடைக்குது. அப்ப எதுக்கு மது குடிக்கணும்னு நினைச்சேன், விட்டுட்டேன்!" என்றான் மனோகரன்.</p><p>"உங்கம்மா பாவம், இது தெரியாம தன்னோட பேச்சைக் கேட்டுத்தான் நீ குடிக்கறதை விட்டுட்டதா நினைச்சு அதை எல்லார்கிட்டேயும் சொல்லி சந்தோஷப்பட்டுக்கறாங்க!" என்றான் பிரகாஷ்."</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 129</b></div><div style="text-align: center;"><b>புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)</b><br /></div></div></div><div><b>குறள் 1281<br /></b><div><div><div>உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்</div><div>கள்ளுக்கில் காமத்திற் குண்டு.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/11/1282.html" target="_blank">குறள் 1282</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/11/1280.html" target="_blank">குறள் 1280</a></b></span></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-781956326366528774.post-7082361493259791222023-11-22T19:48:00.000-08:002023-11-24T23:00:01.865-08:001280. கண்ணால் ஒரு சேதி!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVvmB6t9JmoR5V7DZXTSHxgwxpuC1CYDyJukK-KiXxowld9zO4Abm1VG9h-C12b5deMo9SkmCf0j7157OdJETt1wrzEgZXU1ggSCSGs_6KTvbquiN7plA4qcUOHgjZptQVhg-OM1JoR6Ghp2gNSUufg0Y_m5h8MSXnAYn0jwcKBnEWAkrLCd4gJiEAKF4/s300/images%20(1).jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="168" data-original-width="300" height="168" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVvmB6t9JmoR5V7DZXTSHxgwxpuC1CYDyJukK-KiXxowld9zO4Abm1VG9h-C12b5deMo9SkmCf0j7157OdJETt1wrzEgZXU1ggSCSGs_6KTvbquiN7plA4qcUOHgjZptQVhg-OM1JoR6Ghp2gNSUufg0Y_m5h8MSXnAYn0jwcKBnEWAkrLCd4gJiEAKF4/s1600/images%20(1).jpg" width="300" /></a></div>தன்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த மனைவியைப் பெருமையுடன் பார்த்தான் சீவகன்.<div><br /></div><div>வேலைக்காக வெளியூருக்குப் போவதென்று அவன் முடிவு செய்தபோது மனைவியையும் தன்னுடன் அழைத்துச் செல்வோம் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை.<p>அன்றைய தினத்தை அவன் நினைத்துப் பார்த்தான்.</p><p><span style="font-size: large;">"கு</span>முதா! என் நண்பன் அமுதன் வேலை தேடி வெளியூர் போனான் இல்ல? அவன்கிட்டேந்து எனக்கு ஒரு மடல் வந்திருக்கு" என்றான் சீவகன்.</p><p>என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள் குமுதா.</p><p>"அவனுக்கு அங்கே ஒரு செல்வந்தர்கிட்ட வேலை கிடைச்சிருக்காம். 'நல்ல வேலை, நிறையப் பொருள் கொடுக்கறாரு, உன்னைப் பத்திச் சொன்னேன், உன் நண்பனை இங்கே வரச் சொல்லு, அவனுக்கும் வேலை கொடுக்கறேன்' னு சொன்னாராம். ஒரு ஆண்டு வேலை செஞ்சா போதும், அதுக்குள்ள நிறையப் பணம் சம்பாதிச்சுக்கிட்டு ஊருக்குத் திரும்பி வந்துடலாம்னு எழுதி இருக்கான். அதனால நான் கிளம்பிப் போகலாம்னு இருக்கேன்."</p><p>குமுதா பதில் சொல்லவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.</p><p>அடுத்த நாள் சீவகன் ஊருக்குக் கிளம்புவதற்காகத் தன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது அங்கே வந்த குமுதா அவன் முகத்தைப் பார்த்தாள்.</p><p>முதல்நாள் பார்த்த அதே பார்வை!</p><p>சீவகனுக்கு சுருக்கென்று ஏதோ உறுத்தியது.</p><p>"சரி. நீயும் என்னோட வா!" என்றான்.</p><p>அப்போது அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சி!</p><p>'உங்களைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்' என்று அவள் வாய் திறந்து சொல்லவில்லை. </p><p>அவள் பார்வையே அதை அவனுக்கு உணர்த்தி விட்டது. </p><p>திருமணம் ஆனதிலிருந்து பெண்மையின் மென்மையையும், நளினத்தையும் குமுதாவிடம் அவன் உணர்ந்திருக்கிறான்.</p><p>ஆனால் அன்று அவள் தன் கண்களாலேயே தன்னிடம் பேசித் தன் மனதிலிருந்த ஏக்கத்தையும் விருப்பத்தையும் குறிப்பால் உணர்த்தியதைக் கண்டபோது அவள் பெண்மைக்கு இன்னும் சற்றுப் பெண்மை சேர்ந்திருப்பதாக அவன் உணர்ந்தான்.</p><p><span style="font-size: large;">அ</span>ந்த உணர்வுடன் தன்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த குமுதாவைப் பெருமையுடன் மீண்டும் பார்த்தான் சீவகன்.</p><div style="text-align: center;"><div style="text-align: left;"><div style="text-align: center;"><b>காமத்துப்பால்<br />கற்பியல்</b></div><div style="text-align: center;"><b>அதிகாரம் 128<br />குறிப்பறிவுறுத்தல்</b></div></div></div><div><b>குறள் 1280<br /></b><div><div><div>பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்</div><div>காமநோய் சொல்லி இரவு.</div></div><div><br /></div><div><b>பொருள்:</b></div><div>காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.</div></div></div><div style="text-align: center;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/11/1281.html" target="_blank">குறள் 1281</a></b></div><div style="text-align: center;"><span style="text-align: left;"><b><a href="https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2023/11/1279.html" target="_blank">குறள் 1279</a></b></span></div></div>Parthasarathy Rengaswamihttp://www.blogger.com/profile/07035612305168825517noreply@blogger.com0